ETV Bharat / state

'பிணத்திடம் இருந்து மோதிரத்தை திருடும் கட்சி திமுக' - பிரேமலதா காட்டம்! - செய்தியாளர் சந்திப்பு

தஞ்சாவூர்: பிணத்திடம் இருந்து கூட மோதிரத்தை திருடும் ஒரு கட்சி இருக்கும் என்றால் அது திமுகதான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஐயகாந்த் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

premalatha vijayakanth
author img

By

Published : Aug 28, 2019, 5:03 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தேமுதிக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் முருகேசனின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஐயகாந்த் மணமக்களை வாழ்த்தி திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் மாபெரும் வெற்றி பயணமாக அமையவேண்டும் என்று வாழ்த்தினார். கச்சத்தீவு, ஸ்டெர்லைட், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்னைக்கும் திமுக கையூட்டுப் பெற்று, கையெழுத்து போட்டுவிட்டு தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று சாடினார்.

ஏதாவது ஒரு பொய்யை சொல்லி அரசியல் ஆதாயம் தேடுவதுதான் திமுகவின் நோக்கமாக இருக்கிறது என்றும் பிணத்திடம் இருந்து மோதிரத்தை திருடும் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது திமுக தான் எனவும் கடுமையாக விமர்சித்தார்.

கச்சதீவை விட்டு கொடுத்த திமுகவே அதனை மீட்பதாக கூறுவது மிகபெரிய அவனமாம் என்று குறிப்பிட்ட அவர், விரைவில் வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக-அதிகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்று தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தேமுதிக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் முருகேசனின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஐயகாந்த் மணமக்களை வாழ்த்தி திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் மாபெரும் வெற்றி பயணமாக அமையவேண்டும் என்று வாழ்த்தினார். கச்சத்தீவு, ஸ்டெர்லைட், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்னைக்கும் திமுக கையூட்டுப் பெற்று, கையெழுத்து போட்டுவிட்டு தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று சாடினார்.

ஏதாவது ஒரு பொய்யை சொல்லி அரசியல் ஆதாயம் தேடுவதுதான் திமுகவின் நோக்கமாக இருக்கிறது என்றும் பிணத்திடம் இருந்து மோதிரத்தை திருடும் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது திமுக தான் எனவும் கடுமையாக விமர்சித்தார்.

கச்சதீவை விட்டு கொடுத்த திமுகவே அதனை மீட்பதாக கூறுவது மிகபெரிய அவனமாம் என்று குறிப்பிட்ட அவர், விரைவில் வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக-அதிகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்று தெரிவித்தார்.

Intro: பாதிக்கப்படுகிற திட்டங்கள்அனைத்தையும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தது திமுகதான் பிரேமலதா விஜயகாந்த் பேட்டிBody:

கச்சதீவு, ஸடெர்லைட், மீனவர்கள் என அனைத்து பிரச்சனைக்கும் திமுக கையூட்டுபெற்று கையெழுத்து போட்டதுதான் காரணம் எனவும் பிணத்தில் இருந்து கூட மோதிரத்தை திருடும் ஒரு கட்சி என்றால் அது திமுகதான் என பிரேமலதா விஐயகாந்த் குற்றம்சாட்டு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று நடைபெற்ற தே.மு.தி.க தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் முருகேசன் இல்ல திருமணத்தை தே.மு.தி.க.. பொருளாளர் பிரேமலதாவிஐயகாந்த் நடத்தி வைத்துவிட்டு அளித்த பேட்டியில், தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் மாபெரும வெற்றி பயணமாக அமையவேண்டும் என்ற அவர், கச்சத்தீவு, ஸ்டெர்லைட், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைக்கும் திமுக கையூட்டுப் பெற்று, கையெடுத்து போட்டுவிட்டு தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறது என குற்றம்சாட்டிய பிரேமலதா, ஏதாவது ஒரு குறை சொல்லி அரசியல் ஆதாயம் தேடுவதுதான் ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் வேலை. ஆனால் மக்கள் திமுகவை தற்போது புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிணத்திடம் இருந்து மோதிரத்தை திருடும் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது திமுக தான் என்ற அவர், இதனை மக்கள் நன்றாக புரிந்துகொண்டார்கள் கச்சதீவை விட்டு கொடுத்த திமுகவே அதனை மீட்பதாக கூறுவது மிகபெரிய அவனமாம் என்றார். விரைவில் வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க அதிகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும். இதை முதல்வரும் தெரிவித்து இருக்கிறார். கூட்டணி கட்சிகளுக்கு இடம் உண்டு நல்ல வெற்றி பெறுவோம் நீட் தேர்வில் எப்போதுமே தே.மு.தி.க ஆதரவு உண்டு அதை ஆரம்பத்திலேயே விஐயகாந்த் தெரிவித்துவிட்டார் எனவும் கூறினார்.

பேட்டி - பிரேமலதாவிஐயகாந்த் (பொருளாளர் - தே.மு.தி.க)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.