ETV Bharat / state

'தேவைக்கு ஏற்ப விதை, உரம் கையிருப்பில் உள்ளன' - வேளாண்துறை அமைச்சர் - விதைகள் கையிருப்பு உள்ளதாக வேளாண் துறை அமைச்சர் தகவல்

தஞ்சாவூர்: விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் கையிருப்பு இருப்பதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

Necessary for farmers Seeds and fertilizers are high Minister of Agriculture
Necessary for farmers Seeds and fertilizers are high Minister of Agriculture
author img

By

Published : Jun 17, 2020, 7:40 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தலைமையில் புதிய கால்நடை மருத்துவமனையை வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு குத்துவிளக்கேற்றி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், "தூர்வாரும் பணிகள் 95 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது. எஞ்சிய பணிகள் இன்னும் ஓரிரு தினங்களில் முடிவடையும். விவசாயிகளின் தேவைக்கு அதிகமாகவே விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் கையிருப்பு உள்ளன.

வேளான் கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தலைமையில் புதிய கால்நடை மருத்துவமனையை வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு குத்துவிளக்கேற்றி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், "தூர்வாரும் பணிகள் 95 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது. எஞ்சிய பணிகள் இன்னும் ஓரிரு தினங்களில் முடிவடையும். விவசாயிகளின் தேவைக்கு அதிகமாகவே விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் கையிருப்பு உள்ளன.

வேளான் கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.