உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வேட்புமனுத் தாக்கல் தீவிரமாக நடைபெற்றது, தான் தூய்மையானவன் என்பதை விளக்கும் வகையில் திருவள்ளுவர், பாரதியார், அப்துல்கலாம் மற்றும் நம்மாழ்வார் வேடமணிந்தவர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சி 14 ஒன்றியம் 5462 ஊராட்சி உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது. இந்நிலையில், இறுதி நாளான இன்று ஆயிரக்கணக்கானோர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
தஞ்சாவூர் ஒன்றியம் நாஞ்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், சுயேட்சையாக போட்டியிட தென்னரசு என்பவர் நூதன முறையில் தூய்மையானவன், நேர்மையானவன் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற வகையில் அப்துல்கலாம், பாரதியார், திருவள்ளுவர், இயற்கை விவசாயி நம்மாழ்வார் உள்ளிட்ட வேடமணிந்தவர்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார்.
அப்போது, வேடமணிந்தவர்கள் வேட்பாளருக்கு மாலையணிவித்து ஆசீர்வாதம் செய்தனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது பல வேட்பாளர்கள் பல விதங்களில் தங்களது தனித்தன்மையை வெளிபடுத்துவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.
வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேடமிட்டது போல் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மக்களிடம் வேடமிட்டால் என்ன செய்வது? என்பதை பொதுமக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
இதையும் படிங்க:
தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்' - தேர்தல் பார்வையாளர்!