தஞ்சாவூர்: திலகர் திடலில் மாவீரர் நாள் நிகழ்ச்சி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் நேற்று (நவ. 27) நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டின் சுற்றுலா வளத்தை அழித்து மலையாளிகள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்கு இந்த நாட்டில் உட்கார்ந்து கொண்டு வழிவகை செய்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரியாமல் இந்த சூழ்ச்சி நடைபெறுகிறது.
ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பல்களை கொண்ட ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து சாட்டையை சுழற்றுங்கள் என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது ஏற்புடையதல்ல. இதன் மூலம் அதிக மின்சாரத்தை விவசாயிகள், வீட்டு உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று மத்திய அரசு மானியத்தை ரத்து செய்வதற்கான முன்னேற்பாடாகத்தான் பார்க்கிறேன்.
மீட்டர் பொருத்தப்படுவதும் ஆதாரை இணைப்பதும் மின் இணைப்புக்கு மேல் வைத்திருப்பதை கண்டுபிடித்து, அதை துண்டிப்பதற்கான சூழ்ச்சி. இதற்கு தமிழ்நாடு அரசு துணை போகக்கூடாது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருக்கார்த்திகை தீபத் திருவிழா: அண்ணாமலையர் கோயிலில் சிறப்பு வழிபாடு...