ETV Bharat / state

தகராறை விலக்கிவிட சென்ற வியாபாரிக்கு அரிவாள் வெட்டு - ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது!

author img

By

Published : May 22, 2020, 11:40 AM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட நபர்களை விலக்கிவிட முயன்ற காய்கறி வியாபாரியை அரிவாளால் வெட்டி கொன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cut-the-sickle-to-the-dealer-who-left-the-tin-can
cut-the-sickle-to-the-dealer-who-left-the-tin-can

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த வலையப்பேட்டை பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி பன்னீர் (42). இவரது வீட்டின் முன்பு மது அருந்திவிட்டு சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனைக்கண்ட பன்னீர் அவர்களை விலக்கிவிட முயற்சி செய்துள்ளார்.

அப்போது சிலர் காய்கறி வியாபாரியின் மீது அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பன்னீரை அருகிலிருந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த அருண், சவுந்தர்ராஜன், ருக்மணி, சுரேஷ், பாலாஜி ஆகிய ஐந்து பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த வலையப்பேட்டை பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி பன்னீர் (42). இவரது வீட்டின் முன்பு மது அருந்திவிட்டு சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனைக்கண்ட பன்னீர் அவர்களை விலக்கிவிட முயற்சி செய்துள்ளார்.

அப்போது சிலர் காய்கறி வியாபாரியின் மீது அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பன்னீரை அருகிலிருந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த அருண், சவுந்தர்ராஜன், ருக்மணி, சுரேஷ், பாலாஜி ஆகிய ஐந்து பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.