ETV Bharat / state

மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை - மகளுக்கு எய்ட்ஸ் நோய், மருத்துவர்கள் அதிர்ச்சி

தஞ்சாவூர் : மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

thanjavur court
thanjavur court
author img

By

Published : Jan 8, 2020, 10:16 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி குமார் (39). இவரின் மனைவி 2015ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது 10 வயது மகளுடன் குமார் வசித்து வந்தார். 2017ஆம் ஆண்டு வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நாள்தோறும் மது அருந்தி விட்டு வந்த குமார், தனது சொந்த மகள் என்றும் பாராமல், பாலியல் வல்லுறவு செய்தார். இச்சம்பவம் குறித்து சக தோழியிடம் சிறுமி தெரிவிக்க, உடனடியாக சைல்டு லைன் அமைப்புக்கு புகார் சென்றது.

அதனடிப்படையில், சைல்டு லைன் அமைப்பினர் தொடர்புடைய கிராமத்தில் விசாரித்தனர். இதில் அச்சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் கொடுமை செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து தந்தையால் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவருக்கு எய்ட்ஸ் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டு லைன் அமைப்பினர் புகார் செய்தனர்.

தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம்

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாரின் பெயருடைய வாக்காளர் பட்டியலால் சர்ச்சை!

இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் குமாரை கைது செய்த காவல்துறையினர், தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, போக்சோ சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் சிறை தண்டனையும் தலா 1200 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், சிறுமிக்கு அரசு 5லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி குமார் (39). இவரின் மனைவி 2015ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது 10 வயது மகளுடன் குமார் வசித்து வந்தார். 2017ஆம் ஆண்டு வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நாள்தோறும் மது அருந்தி விட்டு வந்த குமார், தனது சொந்த மகள் என்றும் பாராமல், பாலியல் வல்லுறவு செய்தார். இச்சம்பவம் குறித்து சக தோழியிடம் சிறுமி தெரிவிக்க, உடனடியாக சைல்டு லைன் அமைப்புக்கு புகார் சென்றது.

அதனடிப்படையில், சைல்டு லைன் அமைப்பினர் தொடர்புடைய கிராமத்தில் விசாரித்தனர். இதில் அச்சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் கொடுமை செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து தந்தையால் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவருக்கு எய்ட்ஸ் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டு லைன் அமைப்பினர் புகார் செய்தனர்.

தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம்

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாரின் பெயருடைய வாக்காளர் பட்டியலால் சர்ச்சை!

இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் குமாரை கைது செய்த காவல்துறையினர், தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, போக்சோ சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் சிறை தண்டனையும் தலா 1200 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், சிறுமிக்கு அரசு 5லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Intro:தஞ்சாவூர் ஜன 07


மகளைப் பாலியல் வல்லுறவு செய்த தந்தைக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்ததுள்ளதுBody:



தஞ்சாவூர் மாவட்டம் , மதுக்கூரை சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி குமார் (39) இவரின் மனைவி 2015 ஆம் ஆண்டில் இறந்துவிட்டார் இதையடுத்து , குமாருடன் அவரது 10 வயது மகளும் வசித்து
வந்துள்ளனர்,
வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நாள்தோறும் மது அருந்தி விட்டு வந்த குமார் , தனது மகளைப் பாலியல் வல்லுறவு செய்து வந்தார் இக் கொடுமை 2016 ஆம் ஆண்டு
முதல் 2017ஆம் ஆண்டு வரை நிகழ்ந்துள்ளது,
இதனை அம்மாணவி தனது தோழியிடம் கூற
சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் சென்றது . இதன்பேரில் , சைல்டு லைன் அமைப்பினர் தொடர்புடைய கிராமத்தில் விசாரித்துள்ளனர் . இதில் அச்சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் கொடுமை செய்தது தெரியவர ய , அச்சிறுமியை மருத்துவமனையில் பரிசோதித்தபோது , அவருக்கு எய்ட்ஸ் இருப்பதும் கண்டறியப்பட்டது .
இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் சைல்டு லைன் அமைப்பி புகார் செய்தனர் . இதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து குமாரைகைது செய்தனர் இதுதொடர்பாக தஞ்சாவூரி
லுள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளுக்கான போக்சோ ) சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது . இந்த வழக்கை நீதிபதி எழிலரசி விசாரித்து , குமாருக்குக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் ( போக்சோ ) சட்டத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் சிறை தண்டனையும் தலா ரூ . 1200 அபராதமும் விதித்து, சிறுமிக்கு அரசு ரூ . 5லட்சம் நிதியுதவியும் , உயர் சிகிச்சையும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார் நீதிமன்றம் பரிந்துரை செய்வதாகவும் தீர்ப்பில்
குறிப்பிட்டுள்ளார்.
Conclusion: sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.