தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று (ஜூலை 24) ஒரே நாளில் 6 ஆயிரத்து 785 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 186 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,730ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 250 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.