ETV Bharat / state

‘காங்கிரஸ் என்னை ஒதுக்கி வைத்துள்ளது’ - முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு - 'காங்கிரஸ் தன்னை ஒதுக்கி வைத்துள்ளது' - முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: கட்சியில் இருந்து காங்கிரஸ் தலைமை தன்னை ஒதுக்கி வைத்திருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் குற்றஞ்சாட்டினார்.

former minister blamed
former minister blamed
author img

By

Published : Dec 24, 2019, 1:01 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரையில் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியக் குழு ஒன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் ராஜேஸ்வரி லோகநாதன் என்பவரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பரப்புரை மேற்கொண்டார்.

அதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அவர், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 40 லட்சம் நபர்களின் குடியுரிமை நீக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 20 லட்சம் இந்துக்கள் மீண்டும் குடியுரிமை பெற்றதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நாட்டின் மதச்சார்பின்மை சிதைந்து போகும் என்று கூறிய மணிசங்கர் அய்யர், மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழும் இந்தியாவை இந்து நாடாக மாற்றும் முயற்சியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

former minister blamed

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை நீக்கியது ஒரு யதார்த்தம் என்றும், டெல்லி ஜந்தர் மந்தரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் தனிப்பட்ட முறையில் தான் கலந்துகொண்டதாக குறிப்பிட்ட மணிசங்கர், காங்கிரஸ் தலைமை தன்னை ஒதுக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரையில் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியக் குழு ஒன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் ராஜேஸ்வரி லோகநாதன் என்பவரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பரப்புரை மேற்கொண்டார்.

அதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அவர், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 40 லட்சம் நபர்களின் குடியுரிமை நீக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 20 லட்சம் இந்துக்கள் மீண்டும் குடியுரிமை பெற்றதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நாட்டின் மதச்சார்பின்மை சிதைந்து போகும் என்று கூறிய மணிசங்கர் அய்யர், மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழும் இந்தியாவை இந்து நாடாக மாற்றும் முயற்சியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

former minister blamed

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை நீக்கியது ஒரு யதார்த்தம் என்றும், டெல்லி ஜந்தர் மந்தரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் தனிப்பட்ட முறையில் தான் கலந்துகொண்டதாக குறிப்பிட்ட மணிசங்கர், காங்கிரஸ் தலைமை தன்னை ஒதுக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Intro:தஞ்சாவூர் டிச 23

காங்கிரஸ் தலைமை தற்போதும் தன்னை ஒதுக்கி வைத்து இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பரபரப்பு பேட்டிBody:

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் அருகே அணைக்கரையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியக் குழு ஒன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ராஜேஸ்வரி லோகநாதன் ஆதரவாக மணிசங்கர் அய்யர் ஆதரவு தெரிவித்தார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 40 லட்சம் பேர் குடியுரிமை நீக்கப்பட்ட தாகவும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பு கிளம்பிய பின்னர் அதில் விசாரணைக்கு பின்னர் 20 லட்சம் இந்துக்கள் மீண்டும் குடியுரிமை பெற்றதாகவும் தெரிவித்தார் இந்த குடியுரிமை மசோதா இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று மணிசங்கர் அய்யர் கண்டனம் தெரிவித்தார் மேலும் இதனால் மாணவ மாணவிகள் மிகவும் பாதிப்படைவார்கள் என்றும் மணிசங்கர் அய்யர் கூறினார் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தால் நாட்டின் மதச்சார்பின்மை சிதைந்து போகும் என்று கருத்துக் கூறிய மணிசங்கர் அய்யர் மதச்சார்பின்மையை நமது நாட்டின் அடிப்படை தத்துவம் என்றும் அதில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்து பிரிவினை ஏற்படுத்துவது மிகவும் தவறு என்றும் குறிப்பிட்டார் ஒற்றுமையாக வாழும் இந்தியா அவை வெறும் இந்து நாடாக மட்டுமே மாற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் மணிசங்கர் அய்யர் குற்றம்சாட்டினார் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை நீக்கியது ஒரு யதார்த்தம் என்றும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக மாணவ மாணவிகள் நடத்திய போராட்டத்தில் தனிப்பட்ட முறையில் தான் கலந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த மணிசங்கர் அய்யர் இது தனக்கும் காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் உள்ள விவகாரம் என்றும் இதில் யாரும் தலையிட வேண்டாம் என்றும் மணி சங்கர் ஐயர் தெரிவித்தார்Conclusion:Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.