ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கும் மீனவர்கள்!

author img

By

Published : Dec 21, 2019, 8:49 PM IST

தஞ்சாவூர்: மீன்வளத்துறை மூலம் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் பழுதாகியுள்ள நிலையில், அதனை அரசு புதுப்பித்துத் தராததால் அந்தாணியார்புரம் மீனவர்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

anthonyarpuram-people-to-boycott-local-body-election
anthonyarpuram-people-to-boycott-local-body-election

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கொள்ளுக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதி அந்தோணியார்புரம். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் இப்பகுதியில், இவர்கள் மீன்பிடித் தொழிலே பிரதானத் தொழிலாக உள்ளது. இவர்களுக்கு 1986ஆம் ஆண்டு மீன்வளத்துறை மூலம் 65 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

வீடுகள் கட்ட கொடுக்கப்பட்டு 33 வருடங்கள் ஆகிவிட்டதால், இந்த வீடுகள் அனைத்தும் பழுதாகி இடிந்துவிழும் நிலையில் உள்ளது. குடும்பங்கள் அதிகரித்துவிட்டதால், குடிசைகளும் அதிகமாகியுள்ளன. இதனால் இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

பழுதாகியுள்ள வீடுகளைப் புதுப்பித்து தரவேண்டும், வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும் என மீனவர்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை அலுவலர்கள் உள்ளிடோரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த புகார் குறித்து இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தேர்தலைப் புறக்கணிக்கும் அந்தோணியார்புரம் மீனவர்கள்

ஆனால் இதேபோன்று பிள்ளையார் திடல், சின்ன மனை, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 1986ஆம் ஆண்டு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளை புதுப்பித்துக் கொடுத்துவிட்டு அந்தோணியார்புரம் மீனவர் குடியிருப்புகளை மட்டும் புதுப்பித்துத்தராமல் எங்களைப் புறக்கணிக்கின்றனர் என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அந்தோணியார்புரம் பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: அதிமுக ஒன்றியச் செயலாளரை கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கொள்ளுக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதி அந்தோணியார்புரம். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் இப்பகுதியில், இவர்கள் மீன்பிடித் தொழிலே பிரதானத் தொழிலாக உள்ளது. இவர்களுக்கு 1986ஆம் ஆண்டு மீன்வளத்துறை மூலம் 65 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

வீடுகள் கட்ட கொடுக்கப்பட்டு 33 வருடங்கள் ஆகிவிட்டதால், இந்த வீடுகள் அனைத்தும் பழுதாகி இடிந்துவிழும் நிலையில் உள்ளது. குடும்பங்கள் அதிகரித்துவிட்டதால், குடிசைகளும் அதிகமாகியுள்ளன. இதனால் இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

பழுதாகியுள்ள வீடுகளைப் புதுப்பித்து தரவேண்டும், வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும் என மீனவர்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை அலுவலர்கள் உள்ளிடோரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த புகார் குறித்து இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தேர்தலைப் புறக்கணிக்கும் அந்தோணியார்புரம் மீனவர்கள்

ஆனால் இதேபோன்று பிள்ளையார் திடல், சின்ன மனை, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 1986ஆம் ஆண்டு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளை புதுப்பித்துக் கொடுத்துவிட்டு அந்தோணியார்புரம் மீனவர் குடியிருப்புகளை மட்டும் புதுப்பித்துத்தராமல் எங்களைப் புறக்கணிக்கின்றனர் என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அந்தோணியார்புரம் பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: அதிமுக ஒன்றியச் செயலாளரை கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி!

Intro:பழுதான வீடுகளை புதுப்பித்து தராமலும் அடிப்படை வசதிகளை செய்து தராமலும் இருப்பதை கண்டித்து மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு


Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கொள்ளுக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதி அந்தோணியார்புரம். இங்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் அன்றாடம் மீன்பிடித் தொழில் செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு குடியிருக்க இடமோ வீடுகளோ இல்லாத நிலையில் கடந்த 1986ஆம் ஆண்டு மீன்வளத்துறை மூலம் 65 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 33 வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த வீடுகள் அனைத்தும் மிகவும் பழுதுபட்டு இடிந்து விழும் தருவாயில் உள்ளது. மேலும் தற்பொழுது குடும்பங்கள் அதிகரித்துவிட்ட நிலையில் அவர்களுக்கு வீடு இல்லாததால் போட்டு குடிசையில் வாழ்ந்து வருகின்றனர் இதனால் இட நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது .இந்நிலையில் இந்த வீடுகளை புதுப்பித்து தரவேண்டும் என்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என மீனவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இடத்தில் புகார் தெரிவித்திருந்தனர். இருந்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதேபோன்று பிள்ளையார்திடல், சின்ன மனை, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 1986 ஆம் ஆண்டு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளை புதுப்பித்துக் கொடுத்துவிட்டு அந்தோணியார் புறம் மீனவர் குடியிருப்புகளை மட்டும் புதுப்பித்து தராமல் இருப்பது தங்களை புறக்கணிக்கும் செயலாகும் என்று இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதை அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் ஓட்டு போடப் போவதில்லை என்றும் இந்தத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.