ETV Bharat / state

கண்களை மூடி சைக்கிள் ஓட்டி சாதனைப்படைத்த ஒன்பது வயது சிறுவன் - Search Results Translation result Tamil English எட்டு கிலோமீட்டர் தூரம் என்பது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இன் முந்தைய சாதனை Eṭṭu kilōmīṭṭar tūram eṉpatu intiyā puk āp rekkārṭs iṉ muntaiya cātaṉai

தஞ்சாவூர்: கண்களை மூடிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் சாதனையை படைத்த ஒன்பது வயது சிறுவனுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.

india book of recdords
india book of recdords
author img

By

Published : Jan 8, 2020, 9:39 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்த ஆனந்த், சித்திரவள்ளி தம்பதியின் மகன் ஆசிய்வ்(9). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் ஆசிய்வ் தனது கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் நிகழ்வை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெறச்செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டடுவந்தார்.

இதையடுத்து இந்த சாதனைக்காகத் தயாரான அவர், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து, திருச்சிற்றம்பலம் வரையிலும் தனது கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியை மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அங்கிருந்து புறப்பட்டு மணிக்கூண்டு, காந்தி சிலை, அண்ணா சிலை, சாமியார் மடம், தலைமை தபால் நிலையம், மணிக்கூண்டு, அதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை புறவழிச்சாலை வழியாக சென்று திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் நிறைவு செய்தார்.

கண்களை மூடி சக்கிள் ஓட்டி சாதனைப்படைத்த ஒன்பது வயது சிறுவன்

மொத்தம் 32.1 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 49 நிமிடத்தில் கடந்து இந்தியா புக் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து ஆசிய்வ் அசத்தியுள்ளார். மேலும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் அதன் கண்காணிப்பாளர் ஹரிஷ், ஆசிய்விடம் சான்றிதழை வழங்கினார்.

மாணவர் ஆசிய்வ் இச்சாதனையை படைப்பதற்கு பட்டுக்கோட்டை காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து பாதுகாப்பு வழங்கினர். எட்டு கிலோ மீட்டர் தூரம் என்பது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இன் முந்தைய சாதனை, அதனை தற்போது இந்த மாணவர் முறியடித்து சாதனைப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தங்கம் வென்று அசத்திய சவுரப் சவுத்ரி!

தஞ்சாவூர் மாவட்டம் பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்த ஆனந்த், சித்திரவள்ளி தம்பதியின் மகன் ஆசிய்வ்(9). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் ஆசிய்வ் தனது கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் நிகழ்வை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெறச்செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டடுவந்தார்.

இதையடுத்து இந்த சாதனைக்காகத் தயாரான அவர், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து, திருச்சிற்றம்பலம் வரையிலும் தனது கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியை மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அங்கிருந்து புறப்பட்டு மணிக்கூண்டு, காந்தி சிலை, அண்ணா சிலை, சாமியார் மடம், தலைமை தபால் நிலையம், மணிக்கூண்டு, அதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை புறவழிச்சாலை வழியாக சென்று திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் நிறைவு செய்தார்.

கண்களை மூடி சக்கிள் ஓட்டி சாதனைப்படைத்த ஒன்பது வயது சிறுவன்

மொத்தம் 32.1 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 49 நிமிடத்தில் கடந்து இந்தியா புக் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து ஆசிய்வ் அசத்தியுள்ளார். மேலும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் அதன் கண்காணிப்பாளர் ஹரிஷ், ஆசிய்விடம் சான்றிதழை வழங்கினார்.

மாணவர் ஆசிய்வ் இச்சாதனையை படைப்பதற்கு பட்டுக்கோட்டை காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து பாதுகாப்பு வழங்கினர். எட்டு கிலோ மீட்டர் தூரம் என்பது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இன் முந்தைய சாதனை, அதனை தற்போது இந்த மாணவர் முறியடித்து சாதனைப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தங்கம் வென்று அசத்திய சவுரப் சவுத்ரி!

Intro:கண்களை மூடிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் சாதனை முயற்சியில் 9 வயது சிறுவன்Body:பால் கன்ஸ் & பீனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் நடத்தும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ல் தடம் பதிக்கும் சாதனை முயற்சி


பொன்னவராயன்கோட்டை சேர்ந்த ஆனந்த் சித்திரவள்ளி இவர்களது மகன் ஆசிய்வ் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.இச்சிறுவன் கண்ணைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் நிகழ்வை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இல் தடம் பதிக்கும் சாதனையை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு கணேசமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்டு மணிக்கூண்டு, காந்தி சிலை, அண்ணா சிலை, சாமியார் மடம், தலைமை தபால் நிலையம், மணிக்கூண்டு, அதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை புறவழிச்சாலை வழியாக சென்று திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் நிறைவு பெற்றார்.32.1 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி49 நிமிட நேரத்தில் கடந்தார். அதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை காந்தி சிலை அருகே அந்த மாணவனுக்கு பாராட்டு விழாவிற்கு பால் கன்ஸ் துணைத் தலைவர் டாக்டர் சதாசிவம் வரவேற்புரை ஆற்ற, பால்கன் துணைத் தலைவர் செந்தில்குமார், பீனிக்ஸ் தலைவர் பாலமுருகன் முன்னிலை வகிக்க, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இன் கண்காணிப்பாளர் ஹரிஷ் வென்றதற்காக சான்றிதழை மாணவனுக்கு வழங்கினார். உடன் உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்தர், பால்கன் ஃபீனிக்ஸ் பொறுப்பாளர்கள் ஜெயேந்திரன், கதிரவன், அறிவழகன், சிவச்சந்திரன் ஆகியோர் இருந்தனர். சாதனை புரிந்த மாணவனுக்கு பட்டுக்கோட்டை காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து பாதுகாப்பினை வழங்கினர். எட்டு கிலோமீட்டர் தூரம் என்பது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இன் முந்தைய சாதனை அதனை இம் மாணவன் கடந்து தடம் பதித்துள்ளது என்பது முக்கியத்துவம்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.