கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (35). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இவர் கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்ற நிலையில், கருப்பூர் புறவழிச்சாலையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. இதில் சம்பவ இடத்திலேயே புண்ணியமூர்த்தி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மற்றும் தாலுக்கா காவல் நிலைய அதிகாரிகள் புண்ணியமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கருமுட்டை விற்பனை விவகாரம்: பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி!