ETV Bharat / state

கடலோர காவல் படையினரின் அலட்சியத்தால் உயிரிழந்த மீனவர்கள்...

author img

By

Published : Sep 7, 2019, 10:39 PM IST

தஞ்சாவூர்: கடலோர காவல்படையினரின் அலட்சியத்தால்தான் நான்கு மீனவர்களின் உயிர் போனது என்று தப்பித்து வந்த மீனவர்கள் கூறியுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர் செய்தியாளர்களுக்கு பேட்டி

ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியிலிருந்து கடந்த 29ஆம் தேதி பைபர் படகு வாங்குவதற்காக மீனவர்கள் 10 பேர் கடலூர் சென்றனர். படகு வாங்கிக்கொண்டு மீண்டும் கடல் வழியாக ராமேஸ்வரம் வந்தபோது மல்லிப்பட்டினம் கடல் பகுதியில் தீடிரென்று ஏற்பட்ட சூறைக்காற்றால் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. இதில் தத்தளித்த நிலையில் இருந்த 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர் .

கடலோர காவல் படையினரின் அலட்சியத்தால் உயிரிழந்த மீனவர்கள்...

மற்ற 4 மீனவர்களை தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினரும் மீன்வளத் துறையினரும் ஈடுபட்டுவந்தனர்.

இதனையடுத்து முத்துப்பேட்டை கடல் பகுதியில் இரண்டு உடல்கள் கரை ஒதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவல் துறையினர் இருவரின் உடல்களை மீட்டு மல்லிப்பட்டினம் கொண்டு வந்தனர்.

மேலும் இரு மீனவர்களின் உடல் கட்டுமாவடி அருகே கரை ஒதுங்கி இருப்பதாக தகவல் வந்ததையடுத்து காவல் துறையினர் அந்த இரண்டு உடல்களையும் மீட்க சென்றுள்ளனர்.

இந்நிலையில், கடலோர காவல் படையினர் அருகில் இருக்கும்போது உதவிக்கு வர அழைத்தும் அவர்கள் கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டனர். அவர்கள் உதவியிருந்தால் 4 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியிலிருந்து கடந்த 29ஆம் தேதி பைபர் படகு வாங்குவதற்காக மீனவர்கள் 10 பேர் கடலூர் சென்றனர். படகு வாங்கிக்கொண்டு மீண்டும் கடல் வழியாக ராமேஸ்வரம் வந்தபோது மல்லிப்பட்டினம் கடல் பகுதியில் தீடிரென்று ஏற்பட்ட சூறைக்காற்றால் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. இதில் தத்தளித்த நிலையில் இருந்த 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர் .

கடலோர காவல் படையினரின் அலட்சியத்தால் உயிரிழந்த மீனவர்கள்...

மற்ற 4 மீனவர்களை தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினரும் மீன்வளத் துறையினரும் ஈடுபட்டுவந்தனர்.

இதனையடுத்து முத்துப்பேட்டை கடல் பகுதியில் இரண்டு உடல்கள் கரை ஒதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவல் துறையினர் இருவரின் உடல்களை மீட்டு மல்லிப்பட்டினம் கொண்டு வந்தனர்.

மேலும் இரு மீனவர்களின் உடல் கட்டுமாவடி அருகே கரை ஒதுங்கி இருப்பதாக தகவல் வந்ததையடுத்து காவல் துறையினர் அந்த இரண்டு உடல்களையும் மீட்க சென்றுள்ளனர்.

இந்நிலையில், கடலோர காவல் படையினர் அருகில் இருக்கும்போது உதவிக்கு வர அழைத்தும் அவர்கள் கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டனர். அவர்கள் உதவியிருந்தால் 4 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Intro:கடலில் மாயமான நான்கு மீனவர்கள் இறந்த நிலையில் உடல்கள் மீட்பு- கடலோர காவல்படை அலட்சியம் காட்டியதால் நான்கு மீனவர்கள் உயிர் போனது- தப்பித்து வந்த மீனவர் பேட்டி


Body:படகு கவிழ்ந்து கடலில் மாயமான 10 மீனவர்களில் 6 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 4 மீனவர்களை தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 4மீனவர்களின் உடல் கடலில் மிதப்பதாக வந்த தகவலை அடுத்து விரைந்து சென்று மீனவர்களின் உடலைமீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். கடலில் நாங்கள் தத்தளித்த போது அருகில் இருந்த கடலோர பாதுகாப்பு படையினரை உதவிக்கு அழைத்தபோது அவர்கள் கண்டு கொள்ளாமல் சென்று விட்டனர். அவர்கள் மட்டும் உதவி செய்திருந்தால் இந்த 4 மீனவர்களையும் காப்பாற்றியிருக்கலாம் என உயிர் பிழைத்த மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.