ETV Bharat / state

குற்றாலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது - 50 லிட்டர் சாராயம் பறிமுதல்

author img

By

Published : Jan 4, 2023, 7:22 PM IST

பழைய குற்றாலம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்த இரண்டுபேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat குற்றாலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது
Etv Bharat குற்றாலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது
குற்றாலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது

தென்காசி: பழைய குற்றாலம் அருகேவுள்ள ஆயிரப்பேரி, பாட்டப்பத்து கிராமத்திலுள்ள தென்னந்தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக குற்றாலம் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஆயிரப்பேரி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பராமரித்து வரும் தென்னந்தோப்பில் உள்ள ஒரு மோட்டார் செட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த பகுதிக்கு காவல் துறையினர் சென்றபோது அவர்களைப் பார்த்த மூன்று நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

அதைப் பார்த்த காவல் துறையினர், அவர்களை விரட்டிச் சென்றபோது, காவல் துறையினர் பிடியில் ஆயிரப்பேரி பகுதியைச் சேர்ந்த முருகையா என்பவரது மகன் கனகராஜ் (31) மற்றும் பாட்டப்பத்து பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் மகன் ராமகிருஷ்ணன் (46) என்ற இருவரும் சிக்கினர்.

முக்கிய குற்றவாளியான ஆயிரப்பேரி பகுதியைச் சேர்ந்த கண்ணன் (25) என்பவர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடினார். மேலும், பிடிபட்ட இரண்டு நபர்களிடமிருந்து சுமார் 50 லிட்டர் மதிப்பிலான கள்ளச் சாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான கண்ணன் என்பவரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரு கேக்குக்கு இவ்வளவு அக்கப்போரா: திருச்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!

குற்றாலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது

தென்காசி: பழைய குற்றாலம் அருகேவுள்ள ஆயிரப்பேரி, பாட்டப்பத்து கிராமத்திலுள்ள தென்னந்தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக குற்றாலம் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஆயிரப்பேரி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பராமரித்து வரும் தென்னந்தோப்பில் உள்ள ஒரு மோட்டார் செட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த பகுதிக்கு காவல் துறையினர் சென்றபோது அவர்களைப் பார்த்த மூன்று நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

அதைப் பார்த்த காவல் துறையினர், அவர்களை விரட்டிச் சென்றபோது, காவல் துறையினர் பிடியில் ஆயிரப்பேரி பகுதியைச் சேர்ந்த முருகையா என்பவரது மகன் கனகராஜ் (31) மற்றும் பாட்டப்பத்து பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் மகன் ராமகிருஷ்ணன் (46) என்ற இருவரும் சிக்கினர்.

முக்கிய குற்றவாளியான ஆயிரப்பேரி பகுதியைச் சேர்ந்த கண்ணன் (25) என்பவர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடினார். மேலும், பிடிபட்ட இரண்டு நபர்களிடமிருந்து சுமார் 50 லிட்டர் மதிப்பிலான கள்ளச் சாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான கண்ணன் என்பவரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரு கேக்குக்கு இவ்வளவு அக்கப்போரா: திருச்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.