ETV Bharat / state

பணியில் இருந்த ரயில்வே பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - கேரள இளைஞர் கைது! - tenkasi Railway woman gatekeeper rape victim arest

பணியில் இருந்த ரயில்வே பெண் ஊழியரை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவத்தில் தலைமறைவான நபரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கு
பாலியல் வன்கொடுமை வழக்கு
author img

By

Published : Feb 20, 2023, 9:27 AM IST

Updated : Feb 20, 2023, 1:36 PM IST

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் பணியில் இருந்த ரயில்வே கேட் பெண் ஊழியரை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கேரள இளைஞரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில், கேட் கீப்பராக கேரளாவை சேர்ந்த ஒரு பெண் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி ரயில்வே கேட் பணியில் ஈடுபட்ட இவரை, மர்ம நபர் ஒருவர் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். தப்பியோட முயன்ற பெண் ஊழியரை, அறையில் இருந்த போன் ரிஷிவரால் மரம் நபர் தாக்கியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்த நிலையில், மர்ம நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி உள்ளார்.

மர்ம நபரின் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த பெண் ஊழியர் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரயில்வே கேட் கீப்பரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தொடர்பாக பாவூர்சத்திரம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் ரயில்வே கேட் மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

எப்போதும் ஆள் நடமாட்டமும், போக்குவரத்தும் இருக்கும் பிரதான பாவூர்த்திரத்திர சாலையில் ரயில்வே பெண் ஊழியருக்கு நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டிற்காக மேம்பாலம் அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வரும் நிலையில், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில இளைஞர்கள், ரயில்வே கேட் அருகே டென்ட் அமைத்து தங்கியுள்ளனர்.

பெண் ஊழியரின் பணியை கண்காணித்து இவர்கள் யாரேனும் இச்செயலில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெண் ஊழியரை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த வழக்கில் தொடர்புடையதாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பத்னாபுரம் தாலுகா வாழவிளை பகுதியை சேர்ந்த அணிஸ் (வயது 28) என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தென்காசி ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய மதுரை கோட்ட் ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர், "கேரளா மாநிலம் புனலூர் பகுதியைச் சேர்ந்தவரான அனீஸ், பாவூர்சத்திரத்தில் தங்கி பெயிண்டிங் தொழில் செய்து வருவதாகவும், ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழக்குகள் கேரளாவில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி ஓராண்டு சிறையில் இருந்த அணீஸ், வெளியே வந்து பாவூர்சத்திரத்தில் தங்கி பெயிண்டிங் தொழில் செய்து வந்ததாகவும், இந்த நிலையில் ரயில்வே பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ய முய்ற்சித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அணீஸ் அணிந்திருந்த உடைகளை கொண்டு அடையாளம் கண்டதாகவும், நகரின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து அவரை மடக்கிப் பிடித்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: RajiniKanth: மகிழ்ச்சியாக இருக்கிறது! - திடீர் ட்வீட்டால் ரசிகர்கள் குஷி!

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் பணியில் இருந்த ரயில்வே கேட் பெண் ஊழியரை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கேரள இளைஞரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில், கேட் கீப்பராக கேரளாவை சேர்ந்த ஒரு பெண் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி ரயில்வே கேட் பணியில் ஈடுபட்ட இவரை, மர்ம நபர் ஒருவர் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். தப்பியோட முயன்ற பெண் ஊழியரை, அறையில் இருந்த போன் ரிஷிவரால் மரம் நபர் தாக்கியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்த நிலையில், மர்ம நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி உள்ளார்.

மர்ம நபரின் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த பெண் ஊழியர் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரயில்வே கேட் கீப்பரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தொடர்பாக பாவூர்சத்திரம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் ரயில்வே கேட் மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

எப்போதும் ஆள் நடமாட்டமும், போக்குவரத்தும் இருக்கும் பிரதான பாவூர்த்திரத்திர சாலையில் ரயில்வே பெண் ஊழியருக்கு நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டிற்காக மேம்பாலம் அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வரும் நிலையில், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில இளைஞர்கள், ரயில்வே கேட் அருகே டென்ட் அமைத்து தங்கியுள்ளனர்.

பெண் ஊழியரின் பணியை கண்காணித்து இவர்கள் யாரேனும் இச்செயலில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெண் ஊழியரை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த வழக்கில் தொடர்புடையதாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பத்னாபுரம் தாலுகா வாழவிளை பகுதியை சேர்ந்த அணிஸ் (வயது 28) என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தென்காசி ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய மதுரை கோட்ட் ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர், "கேரளா மாநிலம் புனலூர் பகுதியைச் சேர்ந்தவரான அனீஸ், பாவூர்சத்திரத்தில் தங்கி பெயிண்டிங் தொழில் செய்து வருவதாகவும், ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழக்குகள் கேரளாவில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி ஓராண்டு சிறையில் இருந்த அணீஸ், வெளியே வந்து பாவூர்சத்திரத்தில் தங்கி பெயிண்டிங் தொழில் செய்து வந்ததாகவும், இந்த நிலையில் ரயில்வே பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ய முய்ற்சித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அணீஸ் அணிந்திருந்த உடைகளை கொண்டு அடையாளம் கண்டதாகவும், நகரின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து அவரை மடக்கிப் பிடித்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: RajiniKanth: மகிழ்ச்சியாக இருக்கிறது! - திடீர் ட்வீட்டால் ரசிகர்கள் குஷி!

Last Updated : Feb 20, 2023, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.