ETV Bharat / state

'காய கல்ப்' விருதை வென்ற செங்கோட்டை அரசு மருத்துவமனை!

சிறந்த அரசு மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு சார்பாக வழங்கப்படும் 'காய கல்ப்' விருதை இந்த ஆண்டு செங்கோட்டை அரசு மருத்துவமனை வென்றுள்ளது.

author img

By

Published : Jul 2, 2021, 6:30 AM IST

செங்கோட்டை அரசு மருத்துவமனை
செங்கோட்டை அரசு மருத்துவமனை

தென்காசி: ஒன்றிய அரசின் சார்பாக சிறந்த அரசு மருத்துவமனைகளுக்கு ஆண்டுதோறும் 'காய கல்ப்' எனும் விருது வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையின் சுற்றுப்புறத் தூய்மை, மருத்துவமனையின் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மருத்துவக் குழுவின் மூலம் நன்கு ஆராய்ந்த பின்னரே இந்த விருது வழங்கப்படுகிறது.

செங்கோட்டை அரசு மருத்துவமனையானது மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் ஏற்கனவே 2017-18, 2018-19, 2019-20 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தொடர்ந்து இந்த விருதுகளில் ஆறுதல் பரிசு ஒரு லட்சம் ரூபாயை வென்றது.

ஆனால், செங்கோட்டை அரசு மருத்துவமனை, இந்த ஆண்டு (2020- 21) மாநில அளவில் முதல் இடம் பெற்று 15 லட்சம் ரூபாயை வென்றுள்ளது. மருத்துவர்கள், பணியாளர்கள் ஆகியோரின் அர்பணிப்புக்கு கிடைக்கும் அங்கீகாரமாக இந்த 'காய கல்ப்' விருது கருதப்படுகிறது.

இதையும் படிங்க: 'பில்டிங் இல்ல... பிளான் இருக்கு..' - விரைவில் எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

தென்காசி: ஒன்றிய அரசின் சார்பாக சிறந்த அரசு மருத்துவமனைகளுக்கு ஆண்டுதோறும் 'காய கல்ப்' எனும் விருது வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையின் சுற்றுப்புறத் தூய்மை, மருத்துவமனையின் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மருத்துவக் குழுவின் மூலம் நன்கு ஆராய்ந்த பின்னரே இந்த விருது வழங்கப்படுகிறது.

செங்கோட்டை அரசு மருத்துவமனையானது மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் ஏற்கனவே 2017-18, 2018-19, 2019-20 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தொடர்ந்து இந்த விருதுகளில் ஆறுதல் பரிசு ஒரு லட்சம் ரூபாயை வென்றது.

ஆனால், செங்கோட்டை அரசு மருத்துவமனை, இந்த ஆண்டு (2020- 21) மாநில அளவில் முதல் இடம் பெற்று 15 லட்சம் ரூபாயை வென்றுள்ளது. மருத்துவர்கள், பணியாளர்கள் ஆகியோரின் அர்பணிப்புக்கு கிடைக்கும் அங்கீகாரமாக இந்த 'காய கல்ப்' விருது கருதப்படுகிறது.

இதையும் படிங்க: 'பில்டிங் இல்ல... பிளான் இருக்கு..' - விரைவில் எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.