ETV Bharat / state

தண்ணீருக்காக அடிபட்ட புள்ளி மான்! - அடிபட்ட புள்ளிமான்

சிவகங்கை: கருங்காலக்குடியில் தண்ணீருக்காக ஊருக்குள் புகுந்த புள்ளிமான் நாய் துரத்தியதில் காயமடைந்தது.

deer
author img

By

Published : Aug 12, 2019, 3:43 PM IST

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், சோழபுரம் அருகே கருங்காலக்குடியில் தண்ணீர் தேடி ஊருக்குள் புள்ளிமான் ஒன்று நுழைந்தது. அப்போது அங்கிருந்த நாய்கள் புள்ளி மானை துரத்தியதால் தப்பிக்க ஓடியபோது கீழே விழுந்து அது அடிபட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மானை மீட்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

Sivagangai
அடிபட்ட புள்ளிமான்
பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு ஊர்மக்கள் உதவியுடன் காட்டுக்குள் அனுப்பிவைத்தனர். தண்ணீர், உணவுத் தேடி காட்டுக்குள் இருந்து வன விலங்குகள் வருவதாலும், அவைகள் பயிர்களை மேய்ந்து நாசம் செய்துவிடுவதாலும் மிகவும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அடிபட்ட புள்ளிமான் மீட்பு
எனவே அரசும் வனத்துறை அலுவலர்களும் வன விலங்குகளுக்குத் தண்ணீர் கிடைக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், சோழபுரம் அருகே கருங்காலக்குடியில் தண்ணீர் தேடி ஊருக்குள் புள்ளிமான் ஒன்று நுழைந்தது. அப்போது அங்கிருந்த நாய்கள் புள்ளி மானை துரத்தியதால் தப்பிக்க ஓடியபோது கீழே விழுந்து அது அடிபட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மானை மீட்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

Sivagangai
அடிபட்ட புள்ளிமான்
பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு ஊர்மக்கள் உதவியுடன் காட்டுக்குள் அனுப்பிவைத்தனர். தண்ணீர், உணவுத் தேடி காட்டுக்குள் இருந்து வன விலங்குகள் வருவதாலும், அவைகள் பயிர்களை மேய்ந்து நாசம் செய்துவிடுவதாலும் மிகவும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அடிபட்ட புள்ளிமான் மீட்பு
எனவே அரசும் வனத்துறை அலுவலர்களும் வன விலங்குகளுக்குத் தண்ணீர் கிடைக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Intro:சிவகங்கை ஆனந்த்
ஆக.12

தண்ணீருக்காக ஊருக்குள் புகுந்த புள்ளிமான் - பொதுமக்கள் மீட்டு காட்டுக்குள் விட்டனர்!

சிவகங்கை அருகே கருங்காலக்குடியில் தண்ணீருக்காக ஊருக்குள் புகுந்த புள்ளிமான் நாய் துரத்தியதில் காயமடைந்தது. அதனை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினர் உதவியுடன் காட்டுக்குள் விட்டனர்.

Body:சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே கருங்காலக்குடியில் தண்ணீர் தேடி ஊருக்குள் புள்ளிமான் ஒன்று நுழைந்தது. அப்போது அங்கிருந்த நாய்கள் மானை துரத்தியதால் தப்பிக்க ஓடியபோது பொதுமக்கள் அதனை மீட்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு ஊர்மக்கள் உதவியுடன் காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகி விட்டது. மேலும் அவைகள் பயிர்களை மேய்ந்து நாசம் செய்துவிடுவதால் மிகவும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Conclusion:எனவே அரசும் வனத்துறை அதிகாரிகளும் வன விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.