சிவகங்கை: சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை, காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் நரிக்குறவ இனமக்கள் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாகச் சேர்ந்து வசித்துவருகின்றனர்.
இந்நிலையில், தங்களை எம்.பி.சி. (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) பட்டியலிலிருந்து நீக்கி பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு கோரிக்கைவைத்து, சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.