ETV Bharat / state

மாமியார் கொடுமை; கடன் தொல்லை - பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை

சிவகங்கை: தேவகோட்டை அருகே கடன் தொல்லை மற்றும் வீட்டை காலிசெய்ய சொல்லி மாமியார் வற்புறுத்தியதால் மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

author img

By

Published : Aug 12, 2020, 2:21 AM IST

death
death

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிதம்பரநாதபுரத்தில் ராமதாஸ் என்பவர் வளர்ப்பு தாய் வசந்தா வீட்டில் இரண்டு மகன்கள், ஒரு மகள் மற்றும் மனைவி பிரியதர்ஷினியுடன் வசித்துவந்தார். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் ராமதாஸ் உயிரிழந்தார். கணவர் இறந்த பின்பும் பிரியதர்ஷினி தனது மூன்று பிள்ளைகளோடு அதே வீட்டில் வசித்துவந்தார்.

இதனிடையே, ராமதாஸுக்கு கடன்கொடுத்த நபர்கள் கடனை திரும்ப செலுத்துமாறு பிரியதர்ஷியினிடம் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர். மாமியார் வசந்தாவும், வாடகை பணம் கேட்டு அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளார். வசந்தாவின் தம்பி ராஜேந்திரனும் பிரியதர்ஷினியை மிரட்டி வாடகை பணம் கேட்டு, கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு பிரியதர்ஷினியின் மகளது கையை முறுக்கியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பிரியதர்ஷனி, தனது பிள்ளைகள் பர்வதவர்த்தினி (16), திருநீலகண்டன் (14), ஹரிகிருஷ்ணன் (12), மூவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தியுள்ளார். இதில், பிரியதர்ஷினி உயிரிழந்த நிலையில், பிள்ளைகள் மூவரும் கவலைக்கிடமான நிலையில், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர்.

உயிரிழந்த குழந்தைகள்
உயிரிழந்த பிள்ளைகள்

இதில், மகள் பர்வதவர்த்தினி, மகன் திருநீலகண்டன் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஹரிகிருஷ்ணன் மருத்துவமனையில் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் திராவிட கட்சிகளை வீழ்த்தும் - அர்ஜூன் சம்பத்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிதம்பரநாதபுரத்தில் ராமதாஸ் என்பவர் வளர்ப்பு தாய் வசந்தா வீட்டில் இரண்டு மகன்கள், ஒரு மகள் மற்றும் மனைவி பிரியதர்ஷினியுடன் வசித்துவந்தார். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் ராமதாஸ் உயிரிழந்தார். கணவர் இறந்த பின்பும் பிரியதர்ஷினி தனது மூன்று பிள்ளைகளோடு அதே வீட்டில் வசித்துவந்தார்.

இதனிடையே, ராமதாஸுக்கு கடன்கொடுத்த நபர்கள் கடனை திரும்ப செலுத்துமாறு பிரியதர்ஷியினிடம் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர். மாமியார் வசந்தாவும், வாடகை பணம் கேட்டு அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளார். வசந்தாவின் தம்பி ராஜேந்திரனும் பிரியதர்ஷினியை மிரட்டி வாடகை பணம் கேட்டு, கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு பிரியதர்ஷினியின் மகளது கையை முறுக்கியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பிரியதர்ஷனி, தனது பிள்ளைகள் பர்வதவர்த்தினி (16), திருநீலகண்டன் (14), ஹரிகிருஷ்ணன் (12), மூவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தியுள்ளார். இதில், பிரியதர்ஷினி உயிரிழந்த நிலையில், பிள்ளைகள் மூவரும் கவலைக்கிடமான நிலையில், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர்.

உயிரிழந்த குழந்தைகள்
உயிரிழந்த பிள்ளைகள்

இதில், மகள் பர்வதவர்த்தினி, மகன் திருநீலகண்டன் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஹரிகிருஷ்ணன் மருத்துவமனையில் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் திராவிட கட்சிகளை வீழ்த்தும் - அர்ஜூன் சம்பத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.