ETV Bharat / state

பொதுவழிப் பாதையில் சுவர் கட்ட தடை விதிக்கக்கோரி மனு

author img

By

Published : Jan 2, 2020, 10:01 AM IST

சேலம்: பொதுவழிப் பாதையை ஆக்கிரமித்து தடுப்புச்சுவர் கட்டி வருபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் கந்தம்பட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

Salem collector office
Untouchable wall issue in Salem

சேலம் மாநகர எல்லைக்குள் உள்ள கந்தம்பட்டி பட்டியலினத்தவர் குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதிக்கு அருகில் வசித்து வரும் வெங்கடாசலம் என்பவர் பொதுவழிப் பாதையை வழிமறித்து தடுப்புச் சுவர் கட்டி வருகிறார்.

இதையறிந்த பட்டியலின குடியிருப்பு மக்கள், வெங்கடாசலம் சுவர் கட்டக் கூடாது என்று வலியுறுத்தினர். ஆனால் "நான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவுக்காரர் என்னிடம் யாரும் சுவர் கட்டக்கூடாது என்று கூறவேண்டாம், அப்படித்தான் சுவரை கட்டுவேன்” என்று வெங்கடாசலம் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் பொதுவழிப் பாதையில் சுவர் முழுமையாக எழுப்பப்பட்டால் மக்கள் வெளியே வருவதற்கு கூட இடம் இல்லாமல் ஆகிவிடும், அந்தப் பகுதியில் உள்ள இடத்தை முழுமையாக சர்வே செய்து பட்டியலின மக்கள் செல்லும் வழிப்பாதையை பிரித்து வழங்க வேண்டும், வெங்கடாசலம் சுவரை கட்டாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சேலம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சுவர் கட்ட தடை விதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

இதையும் படிக்க: துப்புரவுத் தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி

சேலம் மாநகர எல்லைக்குள் உள்ள கந்தம்பட்டி பட்டியலினத்தவர் குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதிக்கு அருகில் வசித்து வரும் வெங்கடாசலம் என்பவர் பொதுவழிப் பாதையை வழிமறித்து தடுப்புச் சுவர் கட்டி வருகிறார்.

இதையறிந்த பட்டியலின குடியிருப்பு மக்கள், வெங்கடாசலம் சுவர் கட்டக் கூடாது என்று வலியுறுத்தினர். ஆனால் "நான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவுக்காரர் என்னிடம் யாரும் சுவர் கட்டக்கூடாது என்று கூறவேண்டாம், அப்படித்தான் சுவரை கட்டுவேன்” என்று வெங்கடாசலம் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் பொதுவழிப் பாதையில் சுவர் முழுமையாக எழுப்பப்பட்டால் மக்கள் வெளியே வருவதற்கு கூட இடம் இல்லாமல் ஆகிவிடும், அந்தப் பகுதியில் உள்ள இடத்தை முழுமையாக சர்வே செய்து பட்டியலின மக்கள் செல்லும் வழிப்பாதையை பிரித்து வழங்க வேண்டும், வெங்கடாசலம் சுவரை கட்டாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சேலம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சுவர் கட்ட தடை விதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

இதையும் படிக்க: துப்புரவுத் தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி

Intro:பொது வழிப் பாதையை ஆக்கிரமித்து தடுப்புச்சுவர் கட்டும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் கந்தம்பட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.


Body:சேலம் மாநகர எல்லைக்குள் உள்ள கந்தம்பட்டி அருந்ததியர் குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலம் காலமாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் வசித்து வரும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் பொதுவழி பாதையை வழிமறித்து தடுப்பு சுவர் கட்டி வருகிறார்.

இதனை அறிந்த அருந்ததியர் குடியிருப்பு மக்கள் வெங்கடாசலம் சுவர் கட்ட கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அவர் அருந்ததியர் மக்களை மிரட்டி நான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவுக்காரர் என்னிடம் யாரும் சுவர் கட்டக்கூடாது என்று கூறவேண்டாம் அப்படித்தான் சுவரை கட்டுவேன் என்று கூறியதாக தெரிகிறது .

இந்த நிலையில் பொது வழிப்பாதையில் சுவர் முழுமையாக கட்டி எழுப்பப்பட்டால் அருந்ததியர் மக்கள் வெளியே வருவதற்கு கூட இடம் இல்லாமல் ஆகிவிடும் , எனவே அந்த பகுதியில் உள்ள இடத்தை முழுமையாக சர்வே செய்து அருந்ததியர் மக்கள் செல்லும் வழிப்பாதையை பிரித்து அளிக்கவேண்டும் எனவும் வெங்கடாசலம் சுவரை கட்டாமல் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.


Conclusion:பேட்டி : ராஜேந்திரன், கந்தம்பட்டி
பொன்னம்மாள், கந்தம்பட்டி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.