ETV Bharat / state

மான் கறியை கடத்தி சென்றவர்கள் கைது - undefined

சேலம்: கோரிமேடு அருகே கன்னங்குறிச்சி போலீசார் வாகன சோதனை நடத்தியபோது 14 கிலோ மான்கறி கடத்திச் சென்றவர்களை கைது செய்தனர்.

மான்கறி பறிமுதல்
author img

By

Published : Jul 26, 2019, 7:43 PM IST

கன்னங்குறிச்சி போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தியபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்திலும் மற்றும் ஒரு இன்னோவா காரிலும் தனித் தனி பொட்டலங்களாக 14 பொட்டலங்கல் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது அதில் மொத்தம் 14 கிலோ மான்கறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து லட்சுமணன் மற்றும் லோகநாதன் ஆகியோரது வாகனத்தை பறித்துக்கொண்டு இருவரையும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள திருக்கு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் காவல்துறை

அவர்களிடம் நடத்திய விசாரணையில், நேற்று அதிகாலை லோகநாதனின் இருசக்கர வாகனத்தை அயோத்தியாப்பட்டணத்தில் நிறுத்திவிட்டு லட்சுமணனுடன் அவருடைய இன்னோவா காரில் இருவரும் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பொய்யபட்டி சென்று அங்குள்ள இரு நபர்களிடம் 14 கிலோ மான் கறி வாங்கியதை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கன்னங்குறிச்சி போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தியபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்திலும் மற்றும் ஒரு இன்னோவா காரிலும் தனித் தனி பொட்டலங்களாக 14 பொட்டலங்கல் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது அதில் மொத்தம் 14 கிலோ மான்கறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து லட்சுமணன் மற்றும் லோகநாதன் ஆகியோரது வாகனத்தை பறித்துக்கொண்டு இருவரையும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள திருக்கு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் காவல்துறை

அவர்களிடம் நடத்திய விசாரணையில், நேற்று அதிகாலை லோகநாதனின் இருசக்கர வாகனத்தை அயோத்தியாப்பட்டணத்தில் நிறுத்திவிட்டு லட்சுமணனுடன் அவருடைய இன்னோவா காரில் இருவரும் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பொய்யபட்டி சென்று அங்குள்ள இரு நபர்களிடம் 14 கிலோ மான் கறி வாங்கியதை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Intro:சேலத்தில் 14 கிலோ மான்கறி வைத்திருந்த இருவர் கைது. கார் மற்றும் பைக் பறிமுதல்.


Body:சேலம் கோரிமேடு அருகே நேற்று மாலை கன்னங்குறிச்சி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனமும் மற்றும் ஒரு காரில் 14 பொட்டலங்களில் பொட்டலம் ஒன்றிலும் தலா ஒரு கிலோ வீதம் இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அது மான் கறி என்று தெரியவந்தது. மேலும் மான் கால்கள் நான்கும் இருந்துள்ளது.

இதனை அடுத்து அந்த இன்னோவா காரில் வந்த சேலம் கருப்பூரை சேர்ந்த லட்சுமணன் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த கன்னங்குறிச்சி சேர்ந்த லோகநாதன் ஆகிய இருவரையும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள திருக்கு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இவர்களின் இனோவா சொகுசு கார் ஒன்றும் ஜூபிடர் இரு சக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பின்னல் பிடிபட்ட லட்சுமணன் மற்றும் லோகநாதன் ஆகியோரிடம் வனச்சரக அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் நேற்று அதிகாலை லோகநாதனின் இருசக்கர வாகனத்தை அயோத்தியா பட்டணத்தில் நிறுத்திவிட்டு லட்சுமணனுடன் அவருடைய இன்னோவா காரில் இருவரும் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பொய்யபட்டி சென்று அங்குள்ள இரு நபர்களிடம் 14 கிலோ மான் கறி வாங்கி வந்ததும் இதை இவர்களுக்கு தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மான் வேட்டையில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரிக்க சேர்வராயன் மேற்கு சரக அலுவலர் தலைமையில் தனி குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. மான் வேட்டையில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தெரிவித்தார்.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.