சேலம் மாவட்டத்தில் உள்ள சோனா கல்லூரியில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சி குறித்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கோவர்தன பீடத்தின் சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ நிஸ்சலாநந்த சரஸ்வதி சுவாமி கலந்துகொண்டார்.
இந்திய கலாசாரத்தில் சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாப்பு, தேசிய ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில், சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ நிஸ்சலாநந்த சரஸ்வதி சுவாமி பக்தர்கள் முன்னிலையில் உரையாற்றினார் .
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அவர் ஆற்றிய உரையை, பக்தர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். பின்னர் பக்தர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு சுவாமி விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சியில் சோனா கல்லூரி தலைவர் வள்ளியப்பா, துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா, சோனா கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : ஸ்ரீ பாலச்சாமிகள் மட ஆலய 102ஆவது குருபூஜை! 1000 பேருக்கு அன்னதானம்!