ETV Bharat / state

நிலத்தை தானமாக எழுதிக் கொடுத்த தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்! - தந்தை கட்டையால் அடித்து கொலை,

சேலம்: வாழப்பாடி அருகே கோயிலுக்கு நிலத்தை தானமாக எழுதிக் கொடுத்த தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

father dead
author img

By

Published : Oct 5, 2019, 5:42 PM IST

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கன்(75). இவருக்கு வசந்தா என்கிற மனைவியும் ரமேஷ் (50), ஜெகதீஷ் (45) என்ற இரண்டு மகன்களும் மஞ்சுளா (40), செல்வி (37) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். சாமி பக்தி கொண்ட ரங்கன் சின்னமநாயக்கன்பாளையம் பகுதியில் பெருமாள் கோயிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து கும்பாபிஷேகம் நடத்தினார்.

தந்தையை கொன்ற மகன்

இந்நிலையில், 25 சென்ட் நிலமும் தானமாக கோயிலுக்கு பொதுவில் எழுதி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ரங்கனின் வீட்டிற்கு வந்த அவரது மூத்த மகன் ரமேஷ், தனது தந்தையிடம் கோயிலுக்கு பணம் கொடுத்ததையும் நிலம் எழுதி கொடுத்ததையும் எதிர்த்து கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ரமேஷ் கட்டையால் தந்தையை பலமாகத் தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த ரங்கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி காவல் துறையினர், ரங்கனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரங்கனின் மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ரங்கனின் மூத்த மகன் ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரோகிணி ஆட்சியராக இருந்தபோது எல்லாம் சரியாக நடந்தது - திமுக எம்பி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கன்(75). இவருக்கு வசந்தா என்கிற மனைவியும் ரமேஷ் (50), ஜெகதீஷ் (45) என்ற இரண்டு மகன்களும் மஞ்சுளா (40), செல்வி (37) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். சாமி பக்தி கொண்ட ரங்கன் சின்னமநாயக்கன்பாளையம் பகுதியில் பெருமாள் கோயிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து கும்பாபிஷேகம் நடத்தினார்.

தந்தையை கொன்ற மகன்

இந்நிலையில், 25 சென்ட் நிலமும் தானமாக கோயிலுக்கு பொதுவில் எழுதி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ரங்கனின் வீட்டிற்கு வந்த அவரது மூத்த மகன் ரமேஷ், தனது தந்தையிடம் கோயிலுக்கு பணம் கொடுத்ததையும் நிலம் எழுதி கொடுத்ததையும் எதிர்த்து கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ரமேஷ் கட்டையால் தந்தையை பலமாகத் தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த ரங்கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி காவல் துறையினர், ரங்கனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரங்கனின் மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ரங்கனின் மூத்த மகன் ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரோகிணி ஆட்சியராக இருந்தபோது எல்லாம் சரியாக நடந்தது - திமுக எம்பி

Intro:சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கோவிலுக்கு நிலத்தை தானமாக எழுதி கொடுத்த தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை வாழப்பாடி போலீசார் கைது செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Body:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கன்(வயது 75). விவசாயி. இவருக்கு வசந்தா என்கிற மனைவியும் ரமேஷ் (50)ஜெகதீஷ் (45) என்ற 2 மகன்களும் மஞ்சுளா (40) செல்வி (37) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

சின்னமநாயக்கன்பாளையம் பகுதியில் பெருமாள் கோவிலுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து கோவில் கும்பாபிசேகம் நடத்தி உள்ளார். இந்த நிலையில் 25 சென்ட் நிலமும் தானமாக கோவிலுக்கு பொதுவில் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரங்க கவுண்டர் வீட்டிற்கு இன்று வந்த அவரது மூத்த மகன் ரமேஷ் கோவிலுக்கு பணம் கொடுத்ததையும் நிலம் எழுதி கொடுத்ததையும் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஏற்பட்ட வாய் தகராறில் அங்கிருந்த கட்டையால் தந்தையை பலமாக தாக்கியுள்ளார் இந்த சம்பவத்தில் ரங்க கவுண்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கனின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் அவரது மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து வாழப்பாடி போலீசார் ரங்கனின் மூத்த மகன் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.