ETV Bharat / state

காதலுக்காக பேய் நாடகம் போட்ட இளம்பெண் - பிரம்பால் அடித்து எல்லைமீறிய திருநங்கை சாமியார் - காதலனை மறக்க இளம் பெண்ணை பிரம்பால் அடித்த திருநங்கை

சேலம்: காதலனை மறக்க வலியுறுத்தி, இளம் பெண்ணை திருநங்கை சாமியார் பிரம்பால் அடிக்கும் காட்சி சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Transgender
Transgender
author img

By

Published : Dec 15, 2019, 2:32 PM IST

Updated : Dec 15, 2019, 5:50 PM IST

சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்தவர் திருநங்கை மதுரா. இவர் இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக அருள் வாக்குக் கூறி கன்னங்குறிச்சி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். குழந்தையின்மை, தொழில் நஷ்டம், ஆண் பெண் வசியம், திருமணத் தடை என அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்வதாக விளம்பரப்படுத்திக்கொண்டு நூற்றுக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளார்.

மதுராவிடம் அருள் வாக்கு கேட்க வரும் பக்தர்களை பிரம்பால் கொடூரமாக அடித்து மிரட்டி அவர்களுக்கு அருள்வாக்கு கொடுப்பதாக தெரிகிறது. இதனையடுத்து, சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த பெற்றோர் தங்களது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி மதுராவிடம் அழைத்து வந்துள்ளனர்.

அப்போது அந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து பிடித்து அவரிடம் பேசுகையில் அவருக்கு பேய் பிடிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டார், மதுரா. இதனையடுத்து அந்த இளம்பெண்ணை பெற்றோர் முன்னிலையில் பிரம்பால் அடித்து, காதலனை மறக்க வலியுறுத்தி மதுரா மிருகத்தனமாக தாக்கியுள்ளார்.

ளம்பெண்ணை பிரம்பால் அடித்த திருநங்கை சாமியார்

அப்போது அப்பெண்ணின் பெற்றோர் மதுரா முன் கைகளைக் கூப்பி கண்களை மூடி அமர்ந்திருந்தனர். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் எடுத்த இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

இதனால் தற்போது மதுராவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் அருள்வாக்கு கேட்க வரும் பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் மதுராவுக்கு, சமூக வலை தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

மதுராவின் இந்த மிருகத்தனமான அருள்வாக்கு கூறும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் மனித உரிமை ஆணையத்தை நாடி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேய் நாடகம் போட்ட இளம்பெண்

இளம்பெண்ணை காதலை கைவிட வலியுறுத்தி, பிரம்பால் அடித்த திருநங்கை சாமியாரின் நடவடிக்கை சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:

தேக்கம்பட்டியில் தொடங்கிய புத்துணர்வு முகாம் - செம மேக்கப்பில் வந்த யானைகள்!

சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்தவர் திருநங்கை மதுரா. இவர் இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக அருள் வாக்குக் கூறி கன்னங்குறிச்சி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். குழந்தையின்மை, தொழில் நஷ்டம், ஆண் பெண் வசியம், திருமணத் தடை என அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்வதாக விளம்பரப்படுத்திக்கொண்டு நூற்றுக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளார்.

மதுராவிடம் அருள் வாக்கு கேட்க வரும் பக்தர்களை பிரம்பால் கொடூரமாக அடித்து மிரட்டி அவர்களுக்கு அருள்வாக்கு கொடுப்பதாக தெரிகிறது. இதனையடுத்து, சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த பெற்றோர் தங்களது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி மதுராவிடம் அழைத்து வந்துள்ளனர்.

அப்போது அந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து பிடித்து அவரிடம் பேசுகையில் அவருக்கு பேய் பிடிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டார், மதுரா. இதனையடுத்து அந்த இளம்பெண்ணை பெற்றோர் முன்னிலையில் பிரம்பால் அடித்து, காதலனை மறக்க வலியுறுத்தி மதுரா மிருகத்தனமாக தாக்கியுள்ளார்.

ளம்பெண்ணை பிரம்பால் அடித்த திருநங்கை சாமியார்

அப்போது அப்பெண்ணின் பெற்றோர் மதுரா முன் கைகளைக் கூப்பி கண்களை மூடி அமர்ந்திருந்தனர். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் எடுத்த இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

இதனால் தற்போது மதுராவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் அருள்வாக்கு கேட்க வரும் பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் மதுராவுக்கு, சமூக வலை தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

மதுராவின் இந்த மிருகத்தனமான அருள்வாக்கு கூறும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் மனித உரிமை ஆணையத்தை நாடி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேய் நாடகம் போட்ட இளம்பெண்

இளம்பெண்ணை காதலை கைவிட வலியுறுத்தி, பிரம்பால் அடித்த திருநங்கை சாமியாரின் நடவடிக்கை சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:

தேக்கம்பட்டியில் தொடங்கிய புத்துணர்வு முகாம் - செம மேக்கப்பில் வந்த யானைகள்!

Intro: காதலனை மறக்க வலியுறுத்தி, பெண்ணை பிரம்பால் அடித்து அருள்வாக்கு கூறி சேலம் திருநங்கை சாமியார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.Body:
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் திருநங்கை மதுரா. இவர் இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக அருள் வாக்கு கூறி கன்னங்குறிச்சி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

குழந்தையின்மை, தொழில் நஷ்டம், ஆண் பெண் வசியம், திருமண தடை, என அனைத்து விதமான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதாக விளம்பரப்படுத்தி நூற்றுக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளார்.

இந்த நிலையில் மதுராவிடம் அருள் வாக்கு கேட்க வரும் இளம்பிள்ளை, பிரம்பால் கொடுரமாக அடித்து மிரட்டி அவர்களுக்கு அருள்வாக்கு கொடுப்பதாக தெரிகிறது.


இந்நிலையில் சேலம் செவ்வாய் பேட்டையை சேர்ந்த பெற்றோர், தங்கள் மகளுக்கு பேய் பிடித்து இருப்பதாகக் கூறி திருநங்கை சாமியார் மதுராவிடம் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, மதுரா
அந்த பெண்ணின் தலைமுடியை கொத்தாக பிடித்து, இழுத்து இளம் பெண்ணிற்குப் பேய் பிடிக்கவில்லை என்பதை கண்டறிந்து உள்ளார்.

பின்னர் இளம் பெண் ணை பிரம்பால் அடித்து, பக்கத்து ஊரில் ஒரு பையனை அந்த பெண் காதலிப்பதை தெரிந்து கொண்டார்.


காதலனை மறந்து, பெற்றோர் பார்த்துள்ள மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மறுத்து , அவர் பேய் பிடித்தது போல நடிப்பதை திருநங்கை சாமியார் மதுரா கண்டுபிடித்தார்.

இதனையடுத்து அந்த இளம்பெண்ணை பெற்றோர் முன்னிலையில் பிரம்பால் அடித்து காதலனை மறக்க வலியுறுத்தி திருநங்கை சாமியார் மதுரா தாக்கியுள்ளார். இதனை அந்த இளம் பெண்ணின் பெற்றோர் மண்டியிட்ட வாழு கைகளைக் கூப்பி கண்களை மூடி திருநங்கை சாமியாரிடம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் சேலம் பகுதியில் பரபரப்பாக வைரலாகி உள்ளது இதனால் திருநங்கை சாமியார் மதுராவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது தன்னிடம் அருள்வாக்கு கேட்க வரும் பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் திருநங்கை சாமியார் மதுராவுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது இவரின் இந்த மிருகத்தனமான அருள்வாக்கு கூறும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் மனித உரிமை ஆணையத்தை நாடி உள்ளதாக தெரிகிறது.


Conclusion:இளம்பெண்ணை காதலை கைவிட வலியுறுத்தி பிரம்பால் அடித்த திருநங்கை சாமியாரின் நடவடிக்கை சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Last Updated : Dec 15, 2019, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.