சேலம் அன்னதானப்பட்டியில் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக திருத்தொண்டர் பேரவையின் தலைவர் அல்லிக்குட்டை, ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களை அந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தக்கோரி அறிவிப்பு செய்யப்பட்டு, சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், வீடுகளை மீட்டனர்.
இது குறித்து அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் கூறுகையில், "அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ஏழு வீடுகள், நிலங்கள் உள்ளிட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாடு முழுவதும் கோயிலுக்குச் சொந்தமான 15 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசியல் பிரமுகர்கள், ரவுடிகள் ஆக்கிரமித்து உரிமை கொண்டாடி வருகின்றனர். அவர்களிடமிருந்து நிலத்தை மீட்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோயில் நிலத்தை கிறிஸ்தவர்கள் அபகரித்ததாக புகார்!