ETV Bharat / state

'நான்தான் மண்ணை அள்ளிக்குவித்தேன்' - திமுக பிரமுகர் ஒப்புதல்.. சேலம் மாவட்ட ஏரியின் நிலை என்ன?

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் அனுமதி பெறாமலும், அனுமதித்த அளவைத் தாண்டியும் கனிம வளங்கள், நாள்தோறும் கொள்ளையடிக்கப்பட்டு வருவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

author img

By

Published : Mar 23, 2023, 7:47 PM IST

Updated : Mar 23, 2023, 8:28 PM IST

’நான்தான் மணலை அள்ளி குவித்தேன்’ - திமுக பிரமுகர் ஒப்புதல்.. கல்லாங்குட்டை ஏரியின் நிலை என்ன?
’நான்தான் மணலை அள்ளி குவித்தேன்’ - திமுக பிரமுகர் ஒப்புதல்.. கல்லாங்குட்டை ஏரியின் நிலை என்ன?
சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் அனுமதி பெறாமலும், அனுமதித்த அளவைத் தாண்டியும் கனிம வளங்கள், நாள்தோறும் கொள்ளையடிக்கப்பட்டு வருவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு வேண்டுகோள்

சேலம்: பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் உள்ளது, கல்லாங்குட்டை ஏரி. இந்த ஏரியானது, வெள்ளாளப்பட்டி கிராமத்திற்கு வெளியே சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் அருகே சிறிய மலைத்தொடரும் உள்ளதால், அங்கிருந்து மழைக் காலங்களில் வரும் மழைநீர் ஏரியில் நிரம்பும் வகையில் இயற்கையாக நீர்வழிப் பாதையும் உள்ளது.

இவ்வாறு காப்புக் காட்டின் அருகில் கல்லாங்குட்டை ஏரி அமைந்துள்ளதால், எப்போதும் அங்கு ஆள் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருக்கும். இந்த ஏரிதான் வெள்ளாளப்பட்டி சுற்று வட்டார கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களுக்கான நீர் ஆதாரமாகவும் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே கடந்த 2019 - 2020ஆம் நிதி ஆண்டில் கல்லாங்குட்டை ஏரியை தமிழ்நாடு அரசு, 20 லட்சம் ரூபாய் செலவில் புனரமைத்து உபரி நீர் தடுப்பணையையும் அமைத்தது.

ஆனால், நடப்பு நிதி ஆண்டில் பருவ மழை அதிக அளவில் பெய்த நிலையிலும், கல்லாங்குட்டை ஏரி தண்ணீர் இன்றி தற்போது வறண்டு காட்சியளிக்கிறது. இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 'அமிர்த குளம்' என்ற திட்டம் சேலம் மாவட்டத்தில் அரசால் அமல்படுத்தப்பட்டது.

அமிர்தகுளம் திட்டம் குறித்தும், விதிமுறைகள் குறித்தும் கடந்த 20.08.2023ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் , ''இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தொடங்கப்பட்ட ‘அமுதம் பெருவிழா’வின் ஒரு பகுதியாக புதிய நீர் நிலைகளை உருவாக்கும் பொருட்டு, குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட அமிர்த குளங்களை உருவாக்கிடவும், ஏற்கனவே உள்ள குளங்களை புனரமைத்திடவும் நீர்பிடிப்புப்பகுதி மற்றும் நீர் வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைக்கு வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தல் மற்றும் மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு

அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 160 பணிகளும், ஊரகப் பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 104 புதிதாக அமிர்தகுளம் அமைக்கும் பணிகளும், ஏற்கனவே உள்ள 56 குளங்களை புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமிர்த குளங்கள் பணியில் இருந்து தோண்டி எடுக்கப்படும் மண், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் சாலைப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அமிர்தகுளத்திற்காக பொக்லைன் மூலம் தோண்டி எடுக்கப்படும் செம்மண், லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு கல்லாங்குட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் வீட்டுமனை நிலத்தில் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகள் தரப்பில் பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புச் செழியனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது , ''அப்படியா, செம்மண் அள்ளப்படுவதும், கொட்டப்படுவதும் எனக்குத் தெரியாது. இதற்கெல்லாம் பெத்தநாயக்கன்பாளையம் பிடிஓதான் பொறுப்பு’’ என்றார்.

தொடர்ந்து பெத்தநாயக்கன்பாளையம் பிடிஓவை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள உதவி பிடிஓ சந்திரசேகரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, ''எனக்கும் தகவல் தெரியாது. எங்களது இன்ஜினியரை அந்தப் பகுதிக்கு அனுப்பி விசாரிக்கிறேன்‌. அரசின் திட்டங்கள் சில சமூக விரோதிகளால் மக்களுக்கு நேரடியாகச் சென்று சேராமல் தடுக்கப்படுகிறது. அதற்கு இது ஒரு உதாரணமாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் அரசியல் தலையீடும் உள்ளது என்று சந்தேகப்படுகிறேன். பெத்தநாயக்கன்பாளையம் திமுக ஒன்றிய பிரமுகர் மூர்த்தி தான் அந்த சந்தேகத்திற்கிடமான நபர்'' எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பெத்தநாயக்கன்பாளையம் திமுக ஒன்றிய பிரமுகர் மூர்த்தியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, ''நான்தான் அமிர்த குளத்திற்காக கல்லாங்குட்டை ஏரியை ஆழப்படுத்தி வருகிறேன். அங்கு எடுக்கப்படும் செம்மண், லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு, எனது நிலத்தில்தான் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அது விவசாய நிலம். விவசாயத்திற்காக கொட்டி வைத்துள்ளேன். அது தவறு என்றால், ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை மாவட்ட ஆட்சியருக்கு செலுத்துகிறேன்.

பொதுமக்கள் கூறுவதுபோல் நான் மோசமானவன் இல்லை. நல்லவன்தான். நான் சட்டப்படிதான் அள்ளி மண்ணை விவசாய நிலத்தில் கொட்டி உள்ளேன்'' என்றார்.

மேலும் இது குறித்து வெள்ளாளப்பட்டி பொதுமக்கள் கூறுகையில், "கடந்த பல மாதங்களாகவே செம்மண் திருட்டு கல்லாங்குட்டை ஏரியில் நடந்து வருகிறது. இது குறித்து கேள்வி கேட்டால், மண் அள்ளும் திமுக பிரமுகர் மூர்த்தி, அடியாட்களை வைத்து வீடு புகுந்து எங்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, அரசு மண் திருட்டை தடுத்து நிறுத்தி, எங்களைப் பாதுகாக்க வேண்டும். கனிம வளம் கொள்ளை போவதை அரசு அனுமதிக்க கூடாது'' என்றனர்.

இதனிடையே, சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி திருமனூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் பட்டா நிலங்களில் பெரிய அளவிலான கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், கடந்த சில நாட்களாக இந்த கனிமக்கொள்ளை அதிகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் திருமானூர் பகுதியில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் வடிவேல் என்ற நபர் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் மற்றும் கனிம வளங்களை வெட்டி விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

அதில், வடிவேல் என்ற தனி நபர், அதிக அளவில் கனிமங்களை இரவு பகல் பாராமல் வெட்டி எடுத்து லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்வதாகவும், கற்களை உடைக்க வைக்கப்படும் வெடிபொருட்கள் மூலம் அருகே உள்ள வீடுகள் அதிர்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். இது மட்டுமல்லாமல் குவாரியில் இருந்து வரும் கனிம தூசுகள், அதிக அளவில் வெளியேறுவதால் காற்று மாசுபாடு ஏற்பட்டு, அதன் மூலம் மக்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பாட்டிகளை கொன்று சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்த சைக்கோ குற்றவாளிகள்: பகீர் தகவல்கள்!

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் அனுமதி பெறாமலும், அனுமதித்த அளவைத் தாண்டியும் கனிம வளங்கள், நாள்தோறும் கொள்ளையடிக்கப்பட்டு வருவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு வேண்டுகோள்

சேலம்: பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் உள்ளது, கல்லாங்குட்டை ஏரி. இந்த ஏரியானது, வெள்ளாளப்பட்டி கிராமத்திற்கு வெளியே சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் அருகே சிறிய மலைத்தொடரும் உள்ளதால், அங்கிருந்து மழைக் காலங்களில் வரும் மழைநீர் ஏரியில் நிரம்பும் வகையில் இயற்கையாக நீர்வழிப் பாதையும் உள்ளது.

இவ்வாறு காப்புக் காட்டின் அருகில் கல்லாங்குட்டை ஏரி அமைந்துள்ளதால், எப்போதும் அங்கு ஆள் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருக்கும். இந்த ஏரிதான் வெள்ளாளப்பட்டி சுற்று வட்டார கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களுக்கான நீர் ஆதாரமாகவும் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே கடந்த 2019 - 2020ஆம் நிதி ஆண்டில் கல்லாங்குட்டை ஏரியை தமிழ்நாடு அரசு, 20 லட்சம் ரூபாய் செலவில் புனரமைத்து உபரி நீர் தடுப்பணையையும் அமைத்தது.

ஆனால், நடப்பு நிதி ஆண்டில் பருவ மழை அதிக அளவில் பெய்த நிலையிலும், கல்லாங்குட்டை ஏரி தண்ணீர் இன்றி தற்போது வறண்டு காட்சியளிக்கிறது. இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 'அமிர்த குளம்' என்ற திட்டம் சேலம் மாவட்டத்தில் அரசால் அமல்படுத்தப்பட்டது.

அமிர்தகுளம் திட்டம் குறித்தும், விதிமுறைகள் குறித்தும் கடந்த 20.08.2023ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் , ''இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தொடங்கப்பட்ட ‘அமுதம் பெருவிழா’வின் ஒரு பகுதியாக புதிய நீர் நிலைகளை உருவாக்கும் பொருட்டு, குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட அமிர்த குளங்களை உருவாக்கிடவும், ஏற்கனவே உள்ள குளங்களை புனரமைத்திடவும் நீர்பிடிப்புப்பகுதி மற்றும் நீர் வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைக்கு வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தல் மற்றும் மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு

அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 160 பணிகளும், ஊரகப் பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 104 புதிதாக அமிர்தகுளம் அமைக்கும் பணிகளும், ஏற்கனவே உள்ள 56 குளங்களை புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமிர்த குளங்கள் பணியில் இருந்து தோண்டி எடுக்கப்படும் மண், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் சாலைப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அமிர்தகுளத்திற்காக பொக்லைன் மூலம் தோண்டி எடுக்கப்படும் செம்மண், லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு கல்லாங்குட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் வீட்டுமனை நிலத்தில் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகள் தரப்பில் பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புச் செழியனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது , ''அப்படியா, செம்மண் அள்ளப்படுவதும், கொட்டப்படுவதும் எனக்குத் தெரியாது. இதற்கெல்லாம் பெத்தநாயக்கன்பாளையம் பிடிஓதான் பொறுப்பு’’ என்றார்.

தொடர்ந்து பெத்தநாயக்கன்பாளையம் பிடிஓவை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள உதவி பிடிஓ சந்திரசேகரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, ''எனக்கும் தகவல் தெரியாது. எங்களது இன்ஜினியரை அந்தப் பகுதிக்கு அனுப்பி விசாரிக்கிறேன்‌. அரசின் திட்டங்கள் சில சமூக விரோதிகளால் மக்களுக்கு நேரடியாகச் சென்று சேராமல் தடுக்கப்படுகிறது. அதற்கு இது ஒரு உதாரணமாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் அரசியல் தலையீடும் உள்ளது என்று சந்தேகப்படுகிறேன். பெத்தநாயக்கன்பாளையம் திமுக ஒன்றிய பிரமுகர் மூர்த்தி தான் அந்த சந்தேகத்திற்கிடமான நபர்'' எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பெத்தநாயக்கன்பாளையம் திமுக ஒன்றிய பிரமுகர் மூர்த்தியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, ''நான்தான் அமிர்த குளத்திற்காக கல்லாங்குட்டை ஏரியை ஆழப்படுத்தி வருகிறேன். அங்கு எடுக்கப்படும் செம்மண், லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு, எனது நிலத்தில்தான் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அது விவசாய நிலம். விவசாயத்திற்காக கொட்டி வைத்துள்ளேன். அது தவறு என்றால், ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை மாவட்ட ஆட்சியருக்கு செலுத்துகிறேன்.

பொதுமக்கள் கூறுவதுபோல் நான் மோசமானவன் இல்லை. நல்லவன்தான். நான் சட்டப்படிதான் அள்ளி மண்ணை விவசாய நிலத்தில் கொட்டி உள்ளேன்'' என்றார்.

மேலும் இது குறித்து வெள்ளாளப்பட்டி பொதுமக்கள் கூறுகையில், "கடந்த பல மாதங்களாகவே செம்மண் திருட்டு கல்லாங்குட்டை ஏரியில் நடந்து வருகிறது. இது குறித்து கேள்வி கேட்டால், மண் அள்ளும் திமுக பிரமுகர் மூர்த்தி, அடியாட்களை வைத்து வீடு புகுந்து எங்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, அரசு மண் திருட்டை தடுத்து நிறுத்தி, எங்களைப் பாதுகாக்க வேண்டும். கனிம வளம் கொள்ளை போவதை அரசு அனுமதிக்க கூடாது'' என்றனர்.

இதனிடையே, சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி திருமனூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் பட்டா நிலங்களில் பெரிய அளவிலான கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், கடந்த சில நாட்களாக இந்த கனிமக்கொள்ளை அதிகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் திருமானூர் பகுதியில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் வடிவேல் என்ற நபர் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் மற்றும் கனிம வளங்களை வெட்டி விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

அதில், வடிவேல் என்ற தனி நபர், அதிக அளவில் கனிமங்களை இரவு பகல் பாராமல் வெட்டி எடுத்து லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்வதாகவும், கற்களை உடைக்க வைக்கப்படும் வெடிபொருட்கள் மூலம் அருகே உள்ள வீடுகள் அதிர்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். இது மட்டுமல்லாமல் குவாரியில் இருந்து வரும் கனிம தூசுகள், அதிக அளவில் வெளியேறுவதால் காற்று மாசுபாடு ஏற்பட்டு, அதன் மூலம் மக்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பாட்டிகளை கொன்று சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்த சைக்கோ குற்றவாளிகள்: பகீர் தகவல்கள்!

Last Updated : Mar 23, 2023, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.