ETV Bharat / state

7 கிலோமீட்டர் நடந்தே சென்று மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்பி!

author img

By

Published : Nov 13, 2019, 11:51 PM IST

சேலம்: எருமாபாளையம் பகுதியிலிருந்து ஜருகுமலைக்கு ஏழு கிலோமீட்டர் நடந்தே சென்று நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

salem

சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் ஜருகுமலை உள்ளது. இங்கு கீழூர், மேலூர் என்ற இரண்டு மலைக்கிராமங்கள் உள்ளன. இரு கிராமங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தாலும், அடிப்படையான சாலை வசதி அங்கு இல்லை. இரு கிராமங்களுக்கும் பொதுமக்கள் நடந்து செல்லும் நிலையே நீடித்து வந்தது.

இதையடுத்து 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மலைப் பாதை அமைக்கும் பணி தற்போது நடந்துவருகிறது. இந்நிலையில், இந்தப் பகுதிக்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபனும் திமுகவினரும் மலை அடிவாரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்றனர். பின்னர் மலைப்பாதையில் இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல முடியாததால் ஏழு கிலோமீட்டர் தூரத்தை நடந்தே சென்றடைந்தனர்.

நடந்து சென்ற பார்த்திபனுக்கு அங்குள்ள கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் கிராம மக்களுடன் பேசிய பார்த்திபன் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவ வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என்றும், அப்பகுதியில் செயல்படும் பள்ளிக்குக் கூடுதலான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த எ.ஸ்.ஆர். பார்த்திபன்

இன்னும் ஆறு மாத காலத்திற்குள் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்து மலைவாழ் மக்கள் வாழ்வு சிறக்க பாடுபடுவேன் என்று பார்த்திபன் மக்களிடம் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: சாலையை சீரமைக்கக் கோரி மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்!

சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் ஜருகுமலை உள்ளது. இங்கு கீழூர், மேலூர் என்ற இரண்டு மலைக்கிராமங்கள் உள்ளன. இரு கிராமங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தாலும், அடிப்படையான சாலை வசதி அங்கு இல்லை. இரு கிராமங்களுக்கும் பொதுமக்கள் நடந்து செல்லும் நிலையே நீடித்து வந்தது.

இதையடுத்து 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மலைப் பாதை அமைக்கும் பணி தற்போது நடந்துவருகிறது. இந்நிலையில், இந்தப் பகுதிக்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபனும் திமுகவினரும் மலை அடிவாரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்றனர். பின்னர் மலைப்பாதையில் இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல முடியாததால் ஏழு கிலோமீட்டர் தூரத்தை நடந்தே சென்றடைந்தனர்.

நடந்து சென்ற பார்த்திபனுக்கு அங்குள்ள கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் கிராம மக்களுடன் பேசிய பார்த்திபன் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவ வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என்றும், அப்பகுதியில் செயல்படும் பள்ளிக்குக் கூடுதலான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த எ.ஸ்.ஆர். பார்த்திபன்

இன்னும் ஆறு மாத காலத்திற்குள் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்து மலைவாழ் மக்கள் வாழ்வு சிறக்க பாடுபடுவேன் என்று பார்த்திபன் மக்களிடம் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: சாலையை சீரமைக்கக் கோரி மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்!

Intro:ஏழு கிலோமீட்டர் மலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகேட்ட பாராளுமன்ற உறுப்பினர்.

மலைப்பாதையில் சாலை வசதியை உடனே முடித்து தர வலியுறுத்தினர்.Body:
சேலம் எருமாபாளையம்
அருகே உள்ளது. ஜருகுமலை.

எருமாபாளையம் பகுதியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் ஜருகுமலை உள்ளது.

இங்கு கீழூர் மற்றும் மேலூர் என்ற இரண்டு மலைக் கிராமங்கள் உள்ளது .
இந்த மலை கிராமங்களுக்கு சேலத்திலிருந்து நடந்துதான் செல்ல வேண்டும்.

இந்த ஜருகுமலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இந்த ஊரில் இதுவரை பாதை வசதி இல்லை இதனையடுத்து ரூபாய் 9 கோடி மதிப்பில் மலை பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது .

இந்த நிலையில் இன்று காலை சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .ஆர். பார்த்திபன் மற்றும் திமுகவினர் மலைக்கு சென்றனர்.

மலை அடிவாரத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்ற இவர்கள் பின்னர் மலைப்பாதையில் இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல முடியாததால் மலைப்பாதையில் நடந்து சென்றனர் .

மலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதன் பிறகு ஊர் மையப்பகுதியில் மரத்தடியில் கிராம மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் பொது மக்களிடம் குறை கேட்டார்.

அப்போது ஊர் மக்கள்மருத்துவ வசதி மற்றும் சாலை வசதி உடனே செய்து தர வேண்டும் என்றும் பள்ளிக்கு தேவையான கூடுதலான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பொதுமக்கள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் பின்னர் பொதுமக்களிடம் பேசினார்

அப்போது அவர் கூறியதாவது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் மருத்துவ வசதி மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் ,இன்னும் 6 மாத காலத்திற்குள் உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து மலைவாழ் மக்கள் வாழ்வு சிறக்க பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.

மலைப்பாதையில் அமைக்கப்பட்டு வரும் சாலை வசதி விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து வலியுறுத்துவதாகவும் மலைவாழ் மக்களிடம் தெரிவித்தார் .

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினர் சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Visuval sent mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.