ETV Bharat / state

பணப்பயன்கள் வழங்காமல் மோசடி: துப்புரவு பணியாளர்கள் ஆட்சியரிடம் புகார்!

author img

By

Published : Dec 2, 2019, 9:14 PM IST

சேலம் : ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு பணப்பயன்கள் வழங்காமல் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக துப்புரவு பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

salem corporation sewage workers petition
salem corporation sewage workers petition

சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், 60 வார்டுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் ஒப்பந்த பணியாளர்களாகப் பணியாற்றி வருவதால், அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை, ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது ஆகிய புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வந்தது.

அதேபோல ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு பணப்பயன்கள், வைப்புநிதி ஆகியவை வழங்காமல் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

துப்புரவு பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

இது தொடர்பாக பலமுறை துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் மாநகராட்சியின் ஆணையரிடம் நேரடியாக புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த துப்புரவு பணியாளர்கள் திரளாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:

லாரி மோதிய விபத்து... தந்தை கண்முன்னே உயிரிழந்த மகள்!

சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், 60 வார்டுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் ஒப்பந்த பணியாளர்களாகப் பணியாற்றி வருவதால், அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை, ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது ஆகிய புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வந்தது.

அதேபோல ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு பணப்பயன்கள், வைப்புநிதி ஆகியவை வழங்காமல் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

துப்புரவு பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

இது தொடர்பாக பலமுறை துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் மாநகராட்சியின் ஆணையரிடம் நேரடியாக புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த துப்புரவு பணியாளர்கள் திரளாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:

லாரி மோதிய விபத்து... தந்தை கண்முன்னே உயிரிழந்த மகள்!

Intro:சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் வைப்பு நிதி மற்றும் ஓய்வு பெறும் பணியாளர்களுக்கான பணப் பயன்கள் ஆகியவை வழங்கப்படாமல் கோடிக்கணக்கான ரூபாய், மோசடி செய்யப்பட்டுள்ளதாக, துப்புரவு பணியாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.


Body:சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களில் பெரும்பான்மையோர் ஒப்பந்த பணியாளர்களாகவும் பணியாற்றி வருவதால் அவர்களுக்கு உரிய ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை என்றும் பிடித்தம் செய்யப்படுவதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

அதேபோல மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களாகப் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு உரிய பணப் பயன்கள் வைப்புநிதி ஆகியவை வழங்கப்படாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன .

இது தொடர்பாக பலமுறை துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் மாநகராட்சியின் ஆணையாளரிடம் நேரடியாக புகார் தெரிவித்தும், புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரளாக வந்து மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ," எங்களது வைப்புநிதி பணம் பிடித்தம் செய்யப்பட்டும் கைகளுக்கு கிடைக்கவில்லை .

இதனை மாநகராட்சி ஆணையாளர் முறைகேடான வழியில் எடுத்துக் கொண்டதாக நாங்கள் அறிந்து அதிர்ச்சி அடைகிறோம்.

எங்களின் உரிமையை மாநகராட்சி நிர்வாகம் வழங்காமல் ஏமாற்றி வருகிறது. எனவே சேலம் மாநகராட்சி ஆணையாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர் எங்களின் வைப்புநிதி பணத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை கொடுத்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.


Conclusion:கோடிக்கணக்கான ரூபாய் துப்புரவு பணியாளர்கள் களிடமிருந்து வைப்பு நிதி என்ற பெயரில் பிடித்தம் செய்யப்பட்டு சேலம் மாநகராட்சி நிர்வாகம் அதை முறைகேடாக அபகரித்துக் கொண்டு உள்ளது என்று துப்புரவு பணியாளர்கள் அளித்துள்ள புகார் மனுவால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.