ETV Bharat / state

'இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களை இனிமேல் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்!' - salem police public awarness short film

சேலம்: இ-சேவை மூலமாக இந்த ஆண்டில் மட்டும் பெறப்பட்ட 23ஆயிரம் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Dec 23, 2019, 12:48 PM IST

சேலம் மாநகர காவல் துறை சார்பில் காவல் துறையினர் ஃபீட் பேக், இ-சேவையில் புகார் அளிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு, தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

இதில் இரண்டு குறும்படங்களை மாநகர காவல் துறை ஆணையாளர் செந்தில்குமார் வெளியிட சென்னை சிபிசிஐடி காவல்துறைத் தலைவர் சங்கர் பெற்றுக்கொண்டார்.

அப்போது குறும்பட வெளியீட்டு விழாவில் பேசிய சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில் குமார், "நடப்பாண்டில் இ-சேவை மூலமாக மட்டும் 23ஆயிரம் புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்து குறைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இ-சேவை புகார் மனுக்களை பொது மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது குறித்து காவல் துறையின் ஃபீட்பேக் செயலி மூலம் அறிந்து கொள்ள முடிவதால், தமிழ் நாடு முழுவதும் இத்திட்டத்தினை செயல்படுத்த தமிழ் நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவுள்ளார். இந்தத் திட்டத்தினால் சேலத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன. மேலும் காவல் துறையில் பெறப்படும் மக்களின் புகார் குறித்து முழுமையான அளவுக்கு நிவர்த்தி செய்ய முடியவில்லை" எனவும் ஆதங்கமாகத் தெரிவித்தார்.

சேலம் காவல் துறையின் குறும்பட வெளியீட்டு விழா

இதையும் படியுங்க:

‘தடையை மீறி திமுக நடத்தும் பேரணி’ - சிசிடிவியை சரிபார்க்கும் பணியில் போலீஸ்!

சேலம் மாநகர காவல் துறை சார்பில் காவல் துறையினர் ஃபீட் பேக், இ-சேவையில் புகார் அளிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு, தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

இதில் இரண்டு குறும்படங்களை மாநகர காவல் துறை ஆணையாளர் செந்தில்குமார் வெளியிட சென்னை சிபிசிஐடி காவல்துறைத் தலைவர் சங்கர் பெற்றுக்கொண்டார்.

அப்போது குறும்பட வெளியீட்டு விழாவில் பேசிய சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில் குமார், "நடப்பாண்டில் இ-சேவை மூலமாக மட்டும் 23ஆயிரம் புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்து குறைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இ-சேவை புகார் மனுக்களை பொது மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது குறித்து காவல் துறையின் ஃபீட்பேக் செயலி மூலம் அறிந்து கொள்ள முடிவதால், தமிழ் நாடு முழுவதும் இத்திட்டத்தினை செயல்படுத்த தமிழ் நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவுள்ளார். இந்தத் திட்டத்தினால் சேலத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன. மேலும் காவல் துறையில் பெறப்படும் மக்களின் புகார் குறித்து முழுமையான அளவுக்கு நிவர்த்தி செய்ய முடியவில்லை" எனவும் ஆதங்கமாகத் தெரிவித்தார்.

சேலம் காவல் துறையின் குறும்பட வெளியீட்டு விழா

இதையும் படியுங்க:

‘தடையை மீறி திமுக நடத்தும் பேரணி’ - சிசிடிவியை சரிபார்க்கும் பணியில் போலீஸ்!

Intro:சேலத்தில் இ சேவை மூலமாக 2019 ஆம் ஆண்டில் மட்டும் 23 ஆயிரம் புகார் மனுக்கள் பெறப்பட்டு உள்ளதாகவும், இவ்வாறு பெறப்படும் புகார் மனுக்களை முழுமையாக நிவர்த்தி செய்ய முடியவில்லை என சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


Body:சேலம் மாநகர காவல்துறை சார்பில் போலீஸ் பீட் பேக் மற்றும் இ சேவை யில் புகார் அளிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு தனியார் விடுதியில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு குறும்படங்களை மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில்குமார் வெளியீடு சென்னை சிபிசிஐடி காவல்துறை தலைவர் சங்கர் பெற்றுக்கொண்டார்.

அப்போது குறும்பட வெளியீட்டு விழாவில் பேசிய சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில்குமார் 2019 ஆம் ஆண்டில் இ சேவை மூலமாக மட்டும் 23 ஆயிரம் புகார் மனுக்கள் பெறப்பட்டு குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் ஈசேவை புகார் மனுக்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும் இரவு நேர ரோந்து போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து போலீஸ் ஃபீட்பேக் செயலி மூலம் அறிந்து கொள்ள முடிவதால் தமிழகம் முழுவதும் இத்திட்டத்தினை செயல்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், திட்டத்தினால் குற்றங்கள் சேலத்தில் குறைந்துள்ளதாகவும் கூறினார். மேலும் காவல்துறையில் பெறப்படும் மக்களின் புகார் குறித்து முழுமையான அளவுக்கு நிவர்த்தி செய்ய முடியவில்லை எனவும் ஆதங்கமாக தெரிவித்தார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.