ETV Bharat / state

தனியார் கல்லூரி, அரசுப் பேருந்து மோதி விபத்து: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

author img

By

Published : Oct 10, 2019, 11:45 AM IST

Updated : Oct 10, 2019, 10:29 PM IST

சேலம்: அயோத்தியா பட்டிணம் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், தனியார் கல்லூரிப் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட முப்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

private college, government bus accident in salem

சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, அயோத்தியாபட்டணம் அருகே வலப்புறமாக திரும்ப முற்பட்டபோது தனியார் கல்லூரிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அரசுப் பேருந்தில் இருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட பயணிகளும் தனியார் கல்லூரிப் பேருந்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களும் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

ஐந்திற்கும் மேற்பட்ட அவசர ஊர்திகள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காரிப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தனியார் கல்லூரி, அரசு பேருந்து மோதி விபத்து

இந்த விபத்தால் அயோத்தியாபட்டணம் புறவழிச் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அந்த விபத்து சம்பவம் பதிவானது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர்.

இதையும் படிங்க:திருப்பத்தூரில் தனியார் பேருந்து மோதி கார் விபத்து! - 5 பேர் படுகாயம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, அயோத்தியாபட்டணம் அருகே வலப்புறமாக திரும்ப முற்பட்டபோது தனியார் கல்லூரிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அரசுப் பேருந்தில் இருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட பயணிகளும் தனியார் கல்லூரிப் பேருந்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களும் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

ஐந்திற்கும் மேற்பட்ட அவசர ஊர்திகள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காரிப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தனியார் கல்லூரி, அரசு பேருந்து மோதி விபத்து

இந்த விபத்தால் அயோத்தியாபட்டணம் புறவழிச் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அந்த விபத்து சம்பவம் பதிவானது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர்.

இதையும் படிங்க:திருப்பத்தூரில் தனியார் பேருந்து மோதி கார் விபத்து! - 5 பேர் படுகாயம்

Intro:
அரசுப் பேருந்து கல்லூரி பேருந்து விபத்து கல்லூரி மாணவிகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயம்.
சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் ,தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்Body:
அயோத்தியாபட்டணம் பைபாஸ் பகுதியில் பேருந்துகள் பயங்கர மோதல் விபத்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

வாழப்பாடியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து இராமலிங்கபுரம் அடுத்த அயோத்தியில் பகுதியில் வலது புறமாக திரும்பி அயோத்தியாபட்டணம் செல்ல முற்பட்டபோது இடதுபுறமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது இதில் அரசுப் பேருந்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட பயணிகளும் தனியார் கல்லூரி பேருந்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரும் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த பயங்கர பேருந்து மோதல் விபத்தால் அயோத்தியாபட்டணம் பகுதியில் புறவழி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு அதில் காயமடைந்த அவர்களை அரசு பொது மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர் இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
Last Updated : Oct 10, 2019, 10:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.