ETV Bharat / state

எங்கள் நிலம் எங்களுக்கே வேண்டும் -விவசாயிகள்

author img

By

Published : Jun 27, 2019, 3:50 PM IST

சேலம்: எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து அரசு அளந்த நிலத்தை மீண்டும் தங்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எட்டு வழிச் சாலை

சென்னை உயர் நீதிமன்றம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து சட்டவிரோதமாக விவசாயிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தினை எட்டு வார காலத்திற்குள் விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனால் உத்தரவு பிறப்பித்து மூன்று மாத காலம் ஆகியும், நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை ஒப்படைக்காமல் தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

விவசாயிகள் கோரிக்கை

இந்நிலையில், இதனைக் கண்டித்து எட்டு வழிச் சாலை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இதுதொடர்பாக பேசிய விவசாயிகள், 'எட்டு வழிச் சாலை பகுதியில் உள்ள விவசாய நிலத்தை நம்பிதான் எங்களின் வாழ்வாதாரமே உள்ளது . குடும்ப செலவிற்குக்கூட நிலத்தை பயன்படுத்த முடியாத சூழலில் தவிக்கின்றோம். எனவே நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழ்நாடு அரசு எங்கள் நிலத்தை எங்களுக்கே வழங்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்' என எச்சரித்தனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

சென்னை உயர் நீதிமன்றம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து சட்டவிரோதமாக விவசாயிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தினை எட்டு வார காலத்திற்குள் விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனால் உத்தரவு பிறப்பித்து மூன்று மாத காலம் ஆகியும், நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை ஒப்படைக்காமல் தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

விவசாயிகள் கோரிக்கை

இந்நிலையில், இதனைக் கண்டித்து எட்டு வழிச் சாலை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இதுதொடர்பாக பேசிய விவசாயிகள், 'எட்டு வழிச் சாலை பகுதியில் உள்ள விவசாய நிலத்தை நம்பிதான் எங்களின் வாழ்வாதாரமே உள்ளது . குடும்ப செலவிற்குக்கூட நிலத்தை பயன்படுத்த முடியாத சூழலில் தவிக்கின்றோம். எனவே நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழ்நாடு அரசு எங்கள் நிலத்தை எங்களுக்கே வழங்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்' என எச்சரித்தனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Intro:சேலம் சென்னை 8 வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் , நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Body:சேலம் சென்னை 8 வழி சாலை திட்டத்தை பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து , அரசு அளந்த நிலத்தை மீண்டும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் - சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டத்தம் தொடர்பாக, அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் 8 வழி சாலை திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து சட்டவிரோதமாக விவசாயிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தினை எட்டு வார காலத்திற்குள் விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க உத்தரவிட்டு இருந்தது . ஆனால் தற்போது மூன்று மாத காலம் ஆகிய நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை அவர்களிடமே ஒப்படைக்காமல் தமிழக அரசு மெத்தனப் போக்கு செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து இன்று சேலம் - சென்னை இடையிலான 8 வழி சாலை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர் .போராட்டத்தின் போது உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இது தொடர்பாக பேட்டியளித்த விவசாயிகள், " விவசாய நிலத்தை நம்பி எங்களின் குடும்ப வாழ்வாதாரம் உள்ளது . ஆனால் தற்போது எந்த ஒரு பயிர் கடனும் நில கடனும் வங்கியில் வாங்க இயலாத சூழல் உள்ளது . அதற்கு காரணம் இது எட்டு வழி சாலை அமைய உள்ள நிலம் அதனால் அதன் மீது எந்த ஒரு கடனும் வழங்க முடியாது என்று வங்கியில் தெரிவித்து வருகின்றனர் . குடும்ப செலவுக்கு கூட நிலத்தை பயன்படுத்த முடியாத சூழலில் 8 வழி சாலை அமைய உள்ள பகுதியில் வசிக்கும் விவசாயிகள் தவித்து வருகிறோம். எனவே நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழக அரசு எங்கள் நிலத்தை எங்களுக்கே வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம்" என்று தெரிவித்தனர்.


Conclusion: விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தங்கள் நிலத்தை தங்களுக்கு வழங்க வேண்டுமென்று கோரி சாலை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட உள்ள விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.