ETV Bharat / state

ஓராண்டில் ரயில்களில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட 1165 குழந்தைகள் மீட்பு! - Rescue of 1165 children brought to work in trains in last one year

சேலம்: பல்வேறு மாநிலங்களிலிருந்து சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு வேலைக்கு அழைத்து வரப்பட்ட 1165 சிறுவ, சிறுமிகளை மீட்டுள்ளதாகக் குழந்தைகள் நலக்குழு தலைவர் தாஸ் கூறியுள்ளார்.

Rescue of 1165 children brought to work in trains in last one year, says head of the Child Welfare Committee
Rescue of 1165 children brought to work in trains in last one year, says head of the Child Welfare Committee
author img

By

Published : Dec 10, 2019, 7:20 PM IST

சேலம் மணியனூர் பகுதியிலுள்ள அரசு சட்டக்கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, சேலம் மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பிலும் இலவச சட்ட ஆலோசனைக் குழு சார்பிலும் பயிற்சி கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலக்குழுத் தலைவர் தாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது சட்டக் கல்லூரி மாணவர்களிடம் பேசிய அவர், குழந்தைத் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்படுவது தெரிந்தால் உடனே காவல் நிலையத்தில் புகார் செய்யலாம் அல்லது குழந்தைகள் நலக்குழுவிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தினார். மேலும் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று மாணவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

மாணவர்களிடையே உரையாற்றும் குழந்தைகள் நலக்குழுத் தலைவர் தாஸ்

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாஸ், “சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 165 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். இதுதவிர வெளி மாநிலங்களிலிருந்து ரயில்களில் வேலைக்காகச் சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களுக்கு வந்த 1165 சிறார்களை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம்; இவர்களில் 118 பேர் சிறுமிகளாவார்.

இந்தக் குழந்தைகள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருக்கும் முட்டை நிறுவனங்களில் பணியாற்றவும் உணவகங்கள், கல்லூரிகளில் துப்புரவுப் பணியில் சேர்த்துவிடவும் அழைத்து வரப்பட்டார்கள். இதுதவிர ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணிக்கும் இவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இவர்களைக் குழந்தைகள் நலக்குழுவினரும் ரயில்வே காவல் துறையினரும் கண்காணித்து குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் சேர்த்துவருகிறோம். இனிமேலும் செய்வோம்” என்றார்.

இதையும் படிங்க: அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்திலிருந்து 26 குழந்தைகள் மீட்பு!

சேலம் மணியனூர் பகுதியிலுள்ள அரசு சட்டக்கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, சேலம் மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பிலும் இலவச சட்ட ஆலோசனைக் குழு சார்பிலும் பயிற்சி கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலக்குழுத் தலைவர் தாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது சட்டக் கல்லூரி மாணவர்களிடம் பேசிய அவர், குழந்தைத் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்படுவது தெரிந்தால் உடனே காவல் நிலையத்தில் புகார் செய்யலாம் அல்லது குழந்தைகள் நலக்குழுவிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தினார். மேலும் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று மாணவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

மாணவர்களிடையே உரையாற்றும் குழந்தைகள் நலக்குழுத் தலைவர் தாஸ்

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாஸ், “சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 165 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். இதுதவிர வெளி மாநிலங்களிலிருந்து ரயில்களில் வேலைக்காகச் சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களுக்கு வந்த 1165 சிறார்களை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம்; இவர்களில் 118 பேர் சிறுமிகளாவார்.

இந்தக் குழந்தைகள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருக்கும் முட்டை நிறுவனங்களில் பணியாற்றவும் உணவகங்கள், கல்லூரிகளில் துப்புரவுப் பணியில் சேர்த்துவிடவும் அழைத்து வரப்பட்டார்கள். இதுதவிர ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணிக்கும் இவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இவர்களைக் குழந்தைகள் நலக்குழுவினரும் ரயில்வே காவல் துறையினரும் கண்காணித்து குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் சேர்த்துவருகிறோம். இனிமேலும் செய்வோம்” என்றார்.

இதையும் படிங்க: அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்திலிருந்து 26 குழந்தைகள் மீட்பு!

Intro:சேலம் மாவட்டத்தில் ஓராண்டில் ரயில்களில் வேலைக்கு வந்த 1165 குழந்தைகள் மீட்பு. சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு நடந்த நிகழ்ச்சியில் தகவல்.


Body:சேலத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்த 1165 சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். என சேலத்தில் நடந்த விழாவில் குழந்தைகள் நலக்குழு தலைவர் தெரிவித்தார்.

சேலம் மணியனூர் பகுதியில் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு அஸ்தம்பட்டி அருகில் உள்ள ஆண்டர்சன் பள்ளியில் சேலம் மாவட்ட குழந்தைகள் நல குழு சார்பிலும், இலவச சட்ட ஆலோசனை குழு சார்பிலும் பயிற்சி கருத்தரங்கு இன்று நடந்தது. இதில் குழந்தைகள் நலக்குழு தலைவர் தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது சட்டக் கல்லூரி மாணவர்களிடம் குழந்தைகள் நலக்குழு தலைவர் கூறி அப்போது சட்டக் கல்லூரி மாணவர்களிடம் குழந்தைகள் நலக்குழு தலைவர் கூறி பேசியதாவது.

குழந்தை தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்படுவது தெரிந்தால் உடனே காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். அல்லது குழந்தைகள் நல குழுவிடம் தகவல் தெரிவிக்கலாம். குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதன்பிறகு குழந்தைகள் நல தலைவர் தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 165 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. இது தவிர வெளி மாநிலங்களில் இருந்து ரயில்களில் வேலைக்காக சேலம், நாமக்கல் வந்த 1165 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவர்களில் சிறுமிகள் 118 பேர் ஆகும்.

இந்த குழந்தைகள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருக்கும் முட்டை நிறுவனங்களில் பணியாற்றவும், ஹோட்டல்கள், கல்லூரிகளில் துப்புரவு பணியில் சேர்ந்து விடவும் அழைத்து வரப்பட்டார்கள். இதுதவிர ஆழ்துளை கிணறு தோண்டும் பணிக்கும் இவர்கள் ஈடுபடுத்த அழைத்து வரப்படுகிறார்கள்.

இவர்களை குழந்தைகள் நல குழுவினரும், ரயில்வே போலீசாரும் கண்காணித்து குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் சேர்த்து வருகிறோம். இவ்வாறு குழந்தைகள் நல தலைவர் தாஸ் தெரிவித்தார்.

பேட்டி: தாஸ் - குழந்தைகள் நல குழு தலைவர்


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.