ETV Bharat / state

நகரை தீவாக்கிய மழைநீர் - வேதனையில் பொதுமக்கள்

author img

By

Published : Nov 3, 2019, 11:28 PM IST

சேலம்: அழகாபுரம் அருகே உள்ள அன்னை தெரசா நகரில் மழைநீர் தேங்கி தீவுபோல காட்சி அளிப்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மழைநீர்

சேலம் அழகாபுரம் அருகே உள்ளது அன்னை தெரசா நகர். இந்தப் பகுதி சேலம் மாநகராட்சியின் நான்காவது மண்டலத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்ததால், மழைநீர் வடிய வடிகால் வசதியில்லாததால் இப்பகுதியை நீர் சூழ்ந்து தீவுபோல் காட்சியளிக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் வாகன ஒட்டிகள் பள்ளம், மேடு தெரியாமல் தண்ணீருக்குள் வாகனத்துடன் விழும் காட்சிகள் தினமும் அரங்கேறி வருகின்றன.

மேலும் இந்த தண்ணீர் தற்போது பச்சை கலராக மாறியதோடு, கொசு உற்பத்தியாகும் நிலையிலும் உள்ளது. இது குறித்து பல முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், மாநகராட்சி அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தேங்கியுள்ள மழைநீர்
தேங்கியுள்ள மழைநீர்

இதே நிலை தொடர்ந்தால் நோய்த்தொற்று ஏற்பட்டு அனைவரும் மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும் எனவும், இனியாவது மாநகராட்சி அலுவலர்கள் மெத்தனபோக்குடன் செயல்படாமல் விரைந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அன்னை தெசரா நகரை தனித்து விட்ட மழைநீர்

மேலும் வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு உரிய வடிகால் வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: மழைநீர் வடிகால் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளம் - பொதுமக்கள் அவதி!

சேலம் அழகாபுரம் அருகே உள்ளது அன்னை தெரசா நகர். இந்தப் பகுதி சேலம் மாநகராட்சியின் நான்காவது மண்டலத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்ததால், மழைநீர் வடிய வடிகால் வசதியில்லாததால் இப்பகுதியை நீர் சூழ்ந்து தீவுபோல் காட்சியளிக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் வாகன ஒட்டிகள் பள்ளம், மேடு தெரியாமல் தண்ணீருக்குள் வாகனத்துடன் விழும் காட்சிகள் தினமும் அரங்கேறி வருகின்றன.

மேலும் இந்த தண்ணீர் தற்போது பச்சை கலராக மாறியதோடு, கொசு உற்பத்தியாகும் நிலையிலும் உள்ளது. இது குறித்து பல முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், மாநகராட்சி அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தேங்கியுள்ள மழைநீர்
தேங்கியுள்ள மழைநீர்

இதே நிலை தொடர்ந்தால் நோய்த்தொற்று ஏற்பட்டு அனைவரும் மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும் எனவும், இனியாவது மாநகராட்சி அலுவலர்கள் மெத்தனபோக்குடன் செயல்படாமல் விரைந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அன்னை தெசரா நகரை தனித்து விட்ட மழைநீர்

மேலும் வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு உரிய வடிகால் வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: மழைநீர் வடிகால் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளம் - பொதுமக்கள் அவதி!

Intro:சேலம் அழகாபுரம் அருகே உள்ள அன்னை தெரசா நகரில் மழைநீர் தேங்கி தீவு போல காட்சி அளிக்கிறது.


Body:சேலம் அழகாபுரம் அருகே உள்ளது அன்னை தெரசா நகர், இந்தப்பகுதி சேலம் மாநகராட்சியில் நான்காவது டிவிஷனில் உள்ளது. இந்த அன்னை தெரசா நகர் தாழ்வான பகுதி என்பதால் சிறிய மழை பெய்தாலும் மழை நீர் தேங்கி விடுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து காரணத்தால் அன்னை தெரசா நகர் பகுதி முழுவதும் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் அதிகாரிகள் முதல் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். அன்னை தெரசா நகர் அருகில் உள்ள படையப்பா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மழைநீர் அன்னை தெரசா நகருக்கு வந்து தேங்கி நிற்கிறது. போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் அன்னைதெரசா நகரில் தேங்கி நின்று விடுகிறது.

குடியிருப்புக்கள் சுற்றிலும் மழைநீர் தேங்கி பச்சை கலராக தண்ணீர் மாறி வருகிறது. இதனால் டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து அந்த பகுதி பொதுமக்கள் சேலம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது மாநகராட்சி நிர்வாகத்தினர் அன்னைதெரசா நகர் பகுதிக்கு வந்து பார்வையிட்டு மழை நீர் வடிய உரிய வழிவகை செய்ய வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர். மழைநீர் தேங்கி உள்ளதால் இந்த நீரில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நடந்து செல்ல பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இது தவிர பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களும் அடிக்கடி வீட்டுக்குள் புகுந்து விடுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர். மழைநீர் தேங்காமல் இருக்க உரிய சாக்கடை வசதி மற்றும் வடிகால் வசதி செய்து தரவேண்டும் என்றும் இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.