ETV Bharat / state

கல்லூரி மாணவிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட இரண்டு புரோக்கர்கள் கைது - சேலத்தில் கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம்

சேலம்: பெரமனூர் அருகே மாணவிகள் உட்பட நான்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்தி வந்த இருவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Salem
author img

By

Published : Sep 21, 2019, 5:11 PM IST

சேலம் மாவட்டம் பெரமனூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கல்லூரி மாணவிகளை வைத்து விபாசாரம் நடத்தப்படுவதாக அஸ்தம்பட்டி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் அண்மையில் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில், ஆத்தூரைச் சேர்ந்த சுதா(32), வாழப்பாடியைச் சேர்ந்த குமார்(32) ஆகிய இருவரும் புரோக்கர்களாக இருந்து, மாணவிகள் உட்பட நான்கு இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, புரோக்கர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு கல்லூரி மாணவிகள் உட்பட நான்கு இளம்பெண்களும் மீட்கப்பட்டு, அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக கருதி பெண்கள் காப்பகத்தில் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் பெரமனூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கல்லூரி மாணவிகளை வைத்து விபாசாரம் நடத்தப்படுவதாக அஸ்தம்பட்டி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் அண்மையில் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில், ஆத்தூரைச் சேர்ந்த சுதா(32), வாழப்பாடியைச் சேர்ந்த குமார்(32) ஆகிய இருவரும் புரோக்கர்களாக இருந்து, மாணவிகள் உட்பட நான்கு இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, புரோக்கர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு கல்லூரி மாணவிகள் உட்பட நான்கு இளம்பெண்களும் மீட்கப்பட்டு, அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக கருதி பெண்கள் காப்பகத்தில் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:

ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய 4 பேர் கைது!

பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகர் கைது

Intro:சேலத்தில் விபச்சாரம் புரோக்கர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர் அவர்கள் கல்லூரி மாணவிகளை வளைத்தது எப்படி ? என்பது குறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்.


Body:சேலம் பெரமனூர் மேயர் நகர் பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அஸ்தம்பட்டி போலீசார் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனையிட்டனர். அப்பொழுது விபச்சார தொழிலில் ஈடுபட்டிருந்த பெண் புரோக்கர் ஆன ஆத்தூரை சேர்ந்த சுதா 32 வாழப்பாடி யைச் சேர்ந்த குமார் 32 ஆகிய 2 பேரை போலீஸ் சார் கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு கல்லூரி மாணவிகளும் 2 இளம்பெண்களும் சிக்கினர். இதில் ஒருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து புரோக்கர்கள் சுதா மற்றும் குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் ஜீப்பில் ஏற்றி விசாரணைக்காக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதேசமயம் இரண்டு கல்லூரி மாணவிகள் உட்பட 4 பேரும் பாதிக்கப்பட்டவர்களாக கருதி பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து கும்பல் தலைவி சுதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது எப்படி ? என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீசார் கூறுகையில் விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய சுதாவை ஏற்கனவே 2 முறை கைது செய்துள்ளோம். ஓரிடத்தில் வீடு எடுத்து தொழில் நடத்தினால் இரண்டு மாதத்திற்கு மேல் இருக்க மாட்டார். இடம்பெயர்ந்து கொண்டு பல்வேறு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

ஆத்தூரில் இருந்து சேலத்திற்கு பஸ்ஸில் வரும்போது கல்லூரி மாணவிகளுடன் சுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மாணவிகளுக்கு சில வாசனை திரவியங்கள், அலங்கார பொருட்களை வாங்கிக் கொடுத்து ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் அவர்களிடம் அதிக அளவு பணம் தருவதாகவும், அதற்கு நான் சொல்லும் விஷயத்தில் ஈடுபட வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இது தவிர வெளி மாநிலங்களை சேர்ந்த பெண்களுடன் சுதா தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு செல்போன் மூலம் வரவழைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். என்றனர் கைதான கும்பல் தலைவி சுதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.