ETV Bharat / state

ட்ரோனுடன் ஓர் கண்ணாம்பூச்சி: திருப்பூர் பாய்ஸை ஓவர்டேக் செய்த சேலம் பாய்ஸ்

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என காவல் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் காவல் துறையினர் , இளைஞர்களை எச்சரிக்கும் வகையில் ஒரு மீம் வீடியோவை உருவாக்கியிருப்பது, சமூக வலைதளத்தில் அதிகளவு பகிரப்பட்டு, பலரையும் சிரிப்புக்குள்ளாக்கி வருகிறது.

author img

By

Published : Apr 17, 2020, 7:16 PM IST

police security drone action in salem
police security drone action in salem

கரோனா லாக்டவுனால் ஒட்டுமொத்தமாக லாக் ஆகி கிடப்பது நாடு மட்டுமல்ல; நம் வீட்டு இளைஞர்களும் தான். அம்மாக்கள், தங்கைகள் என அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து பழைய சீரியல்களை ரீபிட் மோடில் பார்த்துக்கொண்டு ரிமோட்டை மறைத்து விளையாடுவதால், ஊரடங்கில் வெளியில் செல்லும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

வீட்டில் தொல்லை தாங்காமல் வெளியே சென்றால், போலீஸார் வீட்டு வாசலிலேயே லத்தியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கும் இளைஞர்கள், யார் கண்ணிலும் படாமல் மலையடிவாரத்திற்குச் சென்று விளையாடலாம் என்று ஒருமனதாக முடிவு எடுக்கிறார்கள்.

அதன்படி கையில் கேரம் போர்டு, கால்பந்து, கிரிக்கெட் பேட் என சகல விளையாட்டுப் பொருள்களையும் எடுத்துச் சென்று மலையூர் மம்பட்டியான் போல, ஒளிவுமறைவாக தங்களது பொழுதுகளைக் கழிக்கின்றனர். தற்போது அதற்கும் குண்டு வைத்துள்ளது ட்ரோன் எனும் வில்லன்.

வெளியில் வராதீங்க... என்று பல முறை சொல்லியும் கேட்காத மக்களை சைலன்டாக அமுக்க காவல் துறையினர் எடுத்த புதிய முயற்சி தான், ட்ரோன் கேமரா. மக்கள் கூடும் இடத்திற்குச் செல்லாமலேயே அவர்களை மிரட்ட முடியும் என்பதே இதன் ஸ்பெஷாலிட்டி.

சமீபத்தில் திருப்பூர் இளைஞர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கேரம் விளையாடி ட்ரோனில் சிக்காமல் இருக்க, அவர்கள் செய்த அலப்பறையான வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்ட் ஆனது. தற்போது அவர்களை பீட் செய்திருக்கிறார்கள், சேலம் இளைஞர்கள்.

ட்ரோன் கேமராவைப் பார்த்து தலை தெறித்து ஓடிய இளைஞர்கள்
வழக்கம்போல சேலம் மாநகரக் காவலர்கள் கண்காணிக்க ட்ரோனை களமிறக்கியுள்ளனர். அதில் பதிவாகும் காட்சிகளை கழுகுப் பார்வையில் பார்த்துக் கொண்டிருக்கையில், மலைப்பகுதியில் இளைஞர்கள் சிலர் கும்பலாக குழுமியிருந்ததைக் கண்டுள்ளனர்.
ட்ரோனை மெதுவாக கீழே இறக்கி, கண்காணிக்கையில் அந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களை அங்கிருந்து விரட்ட ட்ரோனை அவர்களின் முகத்திற்கு நேராக நிறுத்தி படம் பிடித்துள்ளனர்.
ட்ரோனைக் கண்ட இளைஞர்கள் வடிவேலு பாணியில், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடுவது போல், தலைதெறிக்க ஓடினர். சிலர் தாங்கள் கிரிக்கெட் ஆட வந்ததையே மறந்து ட்ரோனுடன் கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருந்தனர். பயத்தில் ஒருவர் ட்ரோனா... பந்தா... என உறைந்துபோய் கிரிக்கெட் மட்டையை ஓங்கி ஓங்கி அடித்து, அவரும் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிவிட்டார்.
இந்தக் காட்சிகள் அனைத்தையும் வடிவேலு பட காமெடி வசனங்களுடன் எடிட் செய்து சேலம் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இப்போது இதுதான் செம வைரல்.

இதையும் படிங்க: பெரியகுளத்தை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் காவல்துறையினர்

கரோனா லாக்டவுனால் ஒட்டுமொத்தமாக லாக் ஆகி கிடப்பது நாடு மட்டுமல்ல; நம் வீட்டு இளைஞர்களும் தான். அம்மாக்கள், தங்கைகள் என அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து பழைய சீரியல்களை ரீபிட் மோடில் பார்த்துக்கொண்டு ரிமோட்டை மறைத்து விளையாடுவதால், ஊரடங்கில் வெளியில் செல்லும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

வீட்டில் தொல்லை தாங்காமல் வெளியே சென்றால், போலீஸார் வீட்டு வாசலிலேயே லத்தியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கும் இளைஞர்கள், யார் கண்ணிலும் படாமல் மலையடிவாரத்திற்குச் சென்று விளையாடலாம் என்று ஒருமனதாக முடிவு எடுக்கிறார்கள்.

அதன்படி கையில் கேரம் போர்டு, கால்பந்து, கிரிக்கெட் பேட் என சகல விளையாட்டுப் பொருள்களையும் எடுத்துச் சென்று மலையூர் மம்பட்டியான் போல, ஒளிவுமறைவாக தங்களது பொழுதுகளைக் கழிக்கின்றனர். தற்போது அதற்கும் குண்டு வைத்துள்ளது ட்ரோன் எனும் வில்லன்.

வெளியில் வராதீங்க... என்று பல முறை சொல்லியும் கேட்காத மக்களை சைலன்டாக அமுக்க காவல் துறையினர் எடுத்த புதிய முயற்சி தான், ட்ரோன் கேமரா. மக்கள் கூடும் இடத்திற்குச் செல்லாமலேயே அவர்களை மிரட்ட முடியும் என்பதே இதன் ஸ்பெஷாலிட்டி.

சமீபத்தில் திருப்பூர் இளைஞர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கேரம் விளையாடி ட்ரோனில் சிக்காமல் இருக்க, அவர்கள் செய்த அலப்பறையான வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்ட் ஆனது. தற்போது அவர்களை பீட் செய்திருக்கிறார்கள், சேலம் இளைஞர்கள்.

ட்ரோன் கேமராவைப் பார்த்து தலை தெறித்து ஓடிய இளைஞர்கள்
வழக்கம்போல சேலம் மாநகரக் காவலர்கள் கண்காணிக்க ட்ரோனை களமிறக்கியுள்ளனர். அதில் பதிவாகும் காட்சிகளை கழுகுப் பார்வையில் பார்த்துக் கொண்டிருக்கையில், மலைப்பகுதியில் இளைஞர்கள் சிலர் கும்பலாக குழுமியிருந்ததைக் கண்டுள்ளனர்.
ட்ரோனை மெதுவாக கீழே இறக்கி, கண்காணிக்கையில் அந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களை அங்கிருந்து விரட்ட ட்ரோனை அவர்களின் முகத்திற்கு நேராக நிறுத்தி படம் பிடித்துள்ளனர்.
ட்ரோனைக் கண்ட இளைஞர்கள் வடிவேலு பாணியில், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடுவது போல், தலைதெறிக்க ஓடினர். சிலர் தாங்கள் கிரிக்கெட் ஆட வந்ததையே மறந்து ட்ரோனுடன் கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருந்தனர். பயத்தில் ஒருவர் ட்ரோனா... பந்தா... என உறைந்துபோய் கிரிக்கெட் மட்டையை ஓங்கி ஓங்கி அடித்து, அவரும் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிவிட்டார்.
இந்தக் காட்சிகள் அனைத்தையும் வடிவேலு பட காமெடி வசனங்களுடன் எடிட் செய்து சேலம் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இப்போது இதுதான் செம வைரல்.

இதையும் படிங்க: பெரியகுளத்தை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் காவல்துறையினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.