ETV Bharat / state

பெரியார் பல்கலைகழகத்தில் முறைகேடு புகார்; 13 மணி நேரம் சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியது? - salem news

Periyar university: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், 13 மணி நேரம் போலிசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

periyar university
சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 6:19 PM IST

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் உட்பட 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த மாதம் 27ஆம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வீடு, அலுவலகம், உள்பட 6 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தார். அவரை துணை வேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி அவருடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு, சுமார் 25 நிமிடம் தனிப்பட்ட முறையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சிண்டிகேட் கூட்ட அரங்கில் பல்கலைக்கழக துறைத்தலைவர்களுடன், ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, அவர் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக முறைகேடு புகாரில் கைதான துணை வேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 150க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநர் வருகைக்கு முன்னரே அங்குத் திரண்டு இருந்த 150 மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையிலான போலீசார். 7 குழுக்களாகப் பிரிந்து அங்கு உள்ள துணைவேந்தர் அலுவலகம், திட்டம் மற்றும் வளர்ச்சி நிர்வாக அலுவலகம், மாணவர்கள் கணினி அலுவலகம், தமிழ்த் துறை அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது பேராசிரியர்கள் சிலரிடம் போலீசார் விசாரணையும் நடத்தினர். காலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு 11 மணி வரை, சுமார் 13 மணி நேரம் நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகின்றனர். ஆளுநர் வருகை, போலீஸ் சோதனை, மாணவர் அமைப்புகள் போராட்டம் ஆகியவை காரணமாக நேற்று (ஜனவரி 12) காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகக் காணப்பட்டது.

இதையும் படிங்க: இந்தியா கூட்டணி காணொலி ஆலோசனை கூட்டம்: மு.க.ஸ்டாலின், கனிமொழி, கார்கே, ராகுல் பங்கேற்பு!

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் உட்பட 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த மாதம் 27ஆம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வீடு, அலுவலகம், உள்பட 6 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தார். அவரை துணை வேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி அவருடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு, சுமார் 25 நிமிடம் தனிப்பட்ட முறையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சிண்டிகேட் கூட்ட அரங்கில் பல்கலைக்கழக துறைத்தலைவர்களுடன், ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, அவர் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக முறைகேடு புகாரில் கைதான துணை வேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 150க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநர் வருகைக்கு முன்னரே அங்குத் திரண்டு இருந்த 150 மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையிலான போலீசார். 7 குழுக்களாகப் பிரிந்து அங்கு உள்ள துணைவேந்தர் அலுவலகம், திட்டம் மற்றும் வளர்ச்சி நிர்வாக அலுவலகம், மாணவர்கள் கணினி அலுவலகம், தமிழ்த் துறை அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது பேராசிரியர்கள் சிலரிடம் போலீசார் விசாரணையும் நடத்தினர். காலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு 11 மணி வரை, சுமார் 13 மணி நேரம் நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகின்றனர். ஆளுநர் வருகை, போலீஸ் சோதனை, மாணவர் அமைப்புகள் போராட்டம் ஆகியவை காரணமாக நேற்று (ஜனவரி 12) காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகக் காணப்பட்டது.

இதையும் படிங்க: இந்தியா கூட்டணி காணொலி ஆலோசனை கூட்டம்: மு.க.ஸ்டாலின், கனிமொழி, கார்கே, ராகுல் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.