ETV Bharat / state

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பது எப்படி? காவலர்களுக்கு பயிற்சி!

author img

By

Published : Oct 4, 2019, 7:31 PM IST

சேலம்: பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்பது தொடர்பான பயிற்சியை காவல் துறையினருக்கு கமாண்டோ படையினர் வழங்கினர்.

police commando give training to police to rescuing the flood affected public

தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. அப்போது, அதிக மழை பெய்து வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி வெள்ளம் ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை படகு மூலம் மீட்கும் முறைகள் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சியளிக்கப்பட்டது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 200 காவலர்களுக்கு இந்த பயிற்சியளிக்கப்பட்டது.

காவல்துறையின் கமாண்டோ படையைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட குழு நேற்றைய தினம் காவலர்களுக்கு விளக்க உரையளித்தனர். இதனைத்தொடர்ந்து இன்றைய தினம் கன்னங்குறிச்சியில் மூக்கனேரியில் வைத்து செய்முறை பயிற்சி செய்து காட்டப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பயிற்சி

இதில் வெள்ளத்தில் மூழ்கிய நபரை மீட்டு முதலுதவி அளிப்பது எப்படி என்பதை கமாண்டோ படையினர் காவல்துறையினரைக் கொண்டு தத்ரூபமாக செய்து காட்டினர். மேலும், வெள்ளம் சூழ்ந்த இடத்தில் கிடைக்கும் பொருட்களை எப்படி பாதுகாப்பு சாதனமாக மாற்றுவது என்பது குறித்தும் பயிற்சி அளித்தனர்.

இதையும் படிங்க: 'இத அப்பவே கேட்டிருக்கலாம்...!' - முதலமைச்சருக்கு துரைமுருகன் அறிவுரை

தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. அப்போது, அதிக மழை பெய்து வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி வெள்ளம் ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை படகு மூலம் மீட்கும் முறைகள் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சியளிக்கப்பட்டது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 200 காவலர்களுக்கு இந்த பயிற்சியளிக்கப்பட்டது.

காவல்துறையின் கமாண்டோ படையைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட குழு நேற்றைய தினம் காவலர்களுக்கு விளக்க உரையளித்தனர். இதனைத்தொடர்ந்து இன்றைய தினம் கன்னங்குறிச்சியில் மூக்கனேரியில் வைத்து செய்முறை பயிற்சி செய்து காட்டப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பயிற்சி

இதில் வெள்ளத்தில் மூழ்கிய நபரை மீட்டு முதலுதவி அளிப்பது எப்படி என்பதை கமாண்டோ படையினர் காவல்துறையினரைக் கொண்டு தத்ரூபமாக செய்து காட்டினர். மேலும், வெள்ளம் சூழ்ந்த இடத்தில் கிடைக்கும் பொருட்களை எப்படி பாதுகாப்பு சாதனமாக மாற்றுவது என்பது குறித்தும் பயிற்சி அளித்தனர்.

இதையும் படிங்க: 'இத அப்பவே கேட்டிருக்கலாம்...!' - முதலமைச்சருக்கு துரைமுருகன் அறிவுரை

Intro:சேலத்தில் பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்று காவல்துறையினருக்கு கமாண்டோ படையினர் செய்முறை செய்து காட்டினர்.


Body:தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழை வெள்ளத்தால் பேரிடர் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைய சூழ்நிலை உண்டானால் பொதுமக்களை எவ்வாறு மீட்பது என காவல்துறையினருக்கு செய்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. சேலம் காவல் கழகத்திற்கு உட்பட்ட சேலம் மாவட்டம், சேலம் மாநகரம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையை சேர்ந்த 200 காவலர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
காவல்துறையின் கமாண்டோ படையைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு நேற்றையதினம் விளக்க உரை அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் கன்னங்குறிச்சி மூக்கனேரி செய்முறை பயிற்சி செய்து காட்டப்பட்டது. அப்பொழுது வெள்ளத்தில் மூழ்கிய நபரை மீட்டு முதலுதவி அளிப்பது என்று கமாண்டோ படையினர் காவல் துறையினரை கொண்டு தத்ரூபமாக செய்து காட்டினார். தண்ணீரில் மூழ்கும் சூழ்நிலை ஏற்பட்டால் படகு மூலம் எப்படி பயணித்து சென்று காப்பாற்றுவது நீரில் மூழ்கி அவர்களுக்கு மிதவை கொடுத்து காப்பாற்றுவது எப்படி என்றும், நிகழ்வு இடத்தில் கிடைக்கும் பொருட்களை பாதுகாப்பு சாதனமாக மாற்றுவது எப்படி என பயிற்சி அளித்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.