ETV Bharat / state

விடுமுறை நாட்களில் பல்கலையில் ஆய்வு செய்த துணைவேந்தர்? பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 3:38 PM IST

Periyar University: பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஆய்வுக்குs செல்வது ஏற்புடையது அல்ல என்றும், சாட்சிகளை அழிக்க இது மாதிரியான நடவடிக்கைகள் வாய்ப்பாக அமையும் என்பதால், காவல் துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இடங்களை, தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் சேலம் பெரியார் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

Periyar University
Periyar University

சேலம்: பல கட்ட போலீஸ் சோதனை நடத்தப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துறை சார்ந்த அலுவலகங்களில், விடுமுறை நாட்களிலும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆய்வு மேற்கொண்ட நிகழ்விற்கு, பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வைத்தியநாதன் மற்றும் செயலாளர் பிரேம் குமார் கூட்டாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், “தன் மீது பதியப்பட்ட குற்ற வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் இருந்து தங்களை விடுக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவாளர் பொறுப்பு தங்கவேல், இணைப் பேராசிரியர் சதீஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அரசின் அனுமதி பெறாமலும், ஆட்சிக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், அரசு பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருவது சட்டத்திற்கு புறம்பானதாகும். சேலம் பெரியார் பல்கலைக் கழகத் தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரின் அடிப்படையில், கருப்பூர் காவல் நிலையத்தில் துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் சதிஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. துணை வேந்தர் ஜெகநாதன் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பதிவாளர் மற்றும் சதிஷ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில், இந்த மூவரும் தங்கள் மீது உள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளனர். துணை வேந்தர் தொடுத்துள்ள வழக்கின் விசாரணை, வரும் 18ஆம் தேதி நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வருகிறது. சேலம் காவல் துறை, துணை வேந்தருக்கு வழங்கிய பிணையை ரத்து செய்ய வேண்டி தொடுத்த வழக்கின் விசாரணை, வருகிற 19ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட காரணத்தால், பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் சங்கச் செயலாளர் பிரேம்குமார், இன்னும் பணி இடை நீக்கத்தில் தொடர்கிறார். முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட காரணத்தால், பேராசிரியர் கோபி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள பதிவாளர் பொறுப்பு தங்கவேல் மற்றும் இணைப் பேராசிரியர் சதீஷ் ஆகியோர் மீது பல்கலை நிர்வாகமோ, அரசோ எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு, அவர்களை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும், துணை வேந்தர் பிணையில் இருக்கும் பொழுது, துறைகளுக்கு திடீரென நேற்று (ஜன.13) ஆய்வு செய்து உள்ளதாகத் தெரிகிறது.

விடுமுறை நாட்களில் ஆய்வுக்குச் செல்வது ஏற்புடையது அல்ல. சாட்சிகளை அழிக்க இது மாதிரியான நடவடிக்கைகள் வாய்ப்பாக அமையும் என்பதால், காவல் துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இடங்களை, தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டுமாய் சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசினை கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: பெரியார் பல்கலைகழகத்தில் முறைகேடு புகார்; 13 மணி நேரம் சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியது?

சேலம்: பல கட்ட போலீஸ் சோதனை நடத்தப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துறை சார்ந்த அலுவலகங்களில், விடுமுறை நாட்களிலும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆய்வு மேற்கொண்ட நிகழ்விற்கு, பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வைத்தியநாதன் மற்றும் செயலாளர் பிரேம் குமார் கூட்டாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், “தன் மீது பதியப்பட்ட குற்ற வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் இருந்து தங்களை விடுக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவாளர் பொறுப்பு தங்கவேல், இணைப் பேராசிரியர் சதீஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அரசின் அனுமதி பெறாமலும், ஆட்சிக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், அரசு பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருவது சட்டத்திற்கு புறம்பானதாகும். சேலம் பெரியார் பல்கலைக் கழகத் தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரின் அடிப்படையில், கருப்பூர் காவல் நிலையத்தில் துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் சதிஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. துணை வேந்தர் ஜெகநாதன் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பதிவாளர் மற்றும் சதிஷ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில், இந்த மூவரும் தங்கள் மீது உள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளனர். துணை வேந்தர் தொடுத்துள்ள வழக்கின் விசாரணை, வரும் 18ஆம் தேதி நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வருகிறது. சேலம் காவல் துறை, துணை வேந்தருக்கு வழங்கிய பிணையை ரத்து செய்ய வேண்டி தொடுத்த வழக்கின் விசாரணை, வருகிற 19ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட காரணத்தால், பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் சங்கச் செயலாளர் பிரேம்குமார், இன்னும் பணி இடை நீக்கத்தில் தொடர்கிறார். முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட காரணத்தால், பேராசிரியர் கோபி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள பதிவாளர் பொறுப்பு தங்கவேல் மற்றும் இணைப் பேராசிரியர் சதீஷ் ஆகியோர் மீது பல்கலை நிர்வாகமோ, அரசோ எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு, அவர்களை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும், துணை வேந்தர் பிணையில் இருக்கும் பொழுது, துறைகளுக்கு திடீரென நேற்று (ஜன.13) ஆய்வு செய்து உள்ளதாகத் தெரிகிறது.

விடுமுறை நாட்களில் ஆய்வுக்குச் செல்வது ஏற்புடையது அல்ல. சாட்சிகளை அழிக்க இது மாதிரியான நடவடிக்கைகள் வாய்ப்பாக அமையும் என்பதால், காவல் துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இடங்களை, தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டுமாய் சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசினை கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: பெரியார் பல்கலைகழகத்தில் முறைகேடு புகார்; 13 மணி நேரம் சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.