ETV Bharat / state

சேலத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பூங்கா! - Ramakrishna Park

சேலம்: ராமகிருஷ்ணா சாலையில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாநகராட்சி ஆணையர் சதீஷ் தொடங்கிவைத்தார்.

salem
author img

By

Published : Aug 9, 2019, 8:01 PM IST

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவானது சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி பூட்டிக் கிடந்தது. இதனால் இந்தப் பூங்கா மது பிரியர்களின் கூடாரமாக மாறியது. எனவே இதனை புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்து வந்தனர்.

புனரமைக்கப்பட்ட பூங்கா
இந்நிலையில் தனியார் நிறுவன நிதி பங்களிப்பு உதவியுடன் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ராமகிருஷ்ணா பூங்காவானது புனரமைக்கும் பணிகள் சில வாரங்களாக நடைபெற்றுவந்தன. புனரமைக்கும் பணிகள் தற்போது முற்றிலும் முடிவடைந்த சூழலில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் இன்று தொடங்கிவைத்தார்.

தற்போது புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்களும், பெரியவர்கள், முதியவர்கள் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உடற்பயிற்சி சாதனங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இனிவரும் காலங்களில் பூங்கா மது பிரியர்களின் கூடாரமாக மாறாமல் இருக்க பூங்கா வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், தற்போது புனரமைக்கப்பட்டு உள்ள பூங்காவினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டுமெனவும் ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டார்.



சேலம் ராமகிருஷ்ணா சாலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவானது சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி பூட்டிக் கிடந்தது. இதனால் இந்தப் பூங்கா மது பிரியர்களின் கூடாரமாக மாறியது. எனவே இதனை புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்து வந்தனர்.

புனரமைக்கப்பட்ட பூங்கா
இந்நிலையில் தனியார் நிறுவன நிதி பங்களிப்பு உதவியுடன் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ராமகிருஷ்ணா பூங்காவானது புனரமைக்கும் பணிகள் சில வாரங்களாக நடைபெற்றுவந்தன. புனரமைக்கும் பணிகள் தற்போது முற்றிலும் முடிவடைந்த சூழலில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் இன்று தொடங்கிவைத்தார்.

தற்போது புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்களும், பெரியவர்கள், முதியவர்கள் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உடற்பயிற்சி சாதனங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இனிவரும் காலங்களில் பூங்கா மது பிரியர்களின் கூடாரமாக மாறாமல் இருக்க பூங்கா வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், தற்போது புனரமைக்கப்பட்டு உள்ள பூங்காவினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டுமெனவும் ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டார்.



Intro:சேலம் ராமகிருஷ்ணா சாலையில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாநகராட்சி ஆணையர் சதீஷ் துவக்கி வைத்தார்.


Body:சேலம் ராமகிருஷ்ணா சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவானது கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி பூட்டி கிடந்தது. இதனால் இந்தப் பூங்கா மது பிரியர்கள் in கூடாரமாக மாறியது எனவே இந்தப் பூங்காவை புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்து வந்தனர்.

இந்த நிலையில் தனியார் நிறுவன நிதி பங்களிப்பு உதவியுடன் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ராமகிருஷ்ணா பூங்காவானது புனரமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. புனரமைக்கும் பணிகள் தற்போது முற்றிலும் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் இன்று துவக்கி வைத்தார். தற்போது புதிதாக புனரமைக்கப் பட்டுள்ள இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்களும், பெரியவர்கள் முதியவர்கள் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உடற்பயிற்சி சாதனங்களும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் பூங்காவில் மது பிரியர்களின் கூடாரமாக மாறாமல் இருக்க பூங்கா வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது புனரமைக்கப்பட்டு உள்ள பூங்கா வினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.