ETV Bharat / state

ஆம்புலன்ஸில் பிறந்த அழகான ஆண் குழந்தை! - சேலம், கருமந்துறை, கர்ப்பிணி பெண்

சேலம்: கருமந்துறை அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் ஆம்புலன்சில் சென்று கொண்டிருக்கும் போதே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

ambulance-in-salem
author img

By

Published : Sep 1, 2019, 6:07 PM IST

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வராயன் மலைகளில் இருபதுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் அமைந்துள்ள செம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி பானுமதி கர்ப்பமாக இருந்து வந்த நிலையில், அண்மையில் பானுமதிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் சீனிவாசன் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் பானுமதியை ஏற்றிக்கொண்டு கருமந்துறை அரசு மருத்துவமனையை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த வேளையில், மலைப்பாதையில் லாரி ஒன்று பழுது ஏற்பட்டு நின்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால், ஆம்புலன்ஸ் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

.

ஆம்புலன்ஸில் பிறந்த அழகான ஆண் குழந்தை

இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஸ்டாலின், மருத்துவ உதவியாளர் அறிவுக்கரசு ஆகியோரும் பானுமதியுடன் வந்த இரண்டு உறவினர்ப் பெண்களும் பிரசவத்தை ஆம்புலன்ஸிலேயே பார்க்கும் சூழல் ஏற்பட்டது. அவர்களின் முயற்சியால் பானுமதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் நிலைமை சீரானவுடன் தாயும் சேயும் கருமந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வராயன் மலைகளில் இருபதுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் அமைந்துள்ள செம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி பானுமதி கர்ப்பமாக இருந்து வந்த நிலையில், அண்மையில் பானுமதிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் சீனிவாசன் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் பானுமதியை ஏற்றிக்கொண்டு கருமந்துறை அரசு மருத்துவமனையை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த வேளையில், மலைப்பாதையில் லாரி ஒன்று பழுது ஏற்பட்டு நின்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால், ஆம்புலன்ஸ் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

.

ஆம்புலன்ஸில் பிறந்த அழகான ஆண் குழந்தை

இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஸ்டாலின், மருத்துவ உதவியாளர் அறிவுக்கரசு ஆகியோரும் பானுமதியுடன் வந்த இரண்டு உறவினர்ப் பெண்களும் பிரசவத்தை ஆம்புலன்ஸிலேயே பார்க்கும் சூழல் ஏற்பட்டது. அவர்களின் முயற்சியால் பானுமதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் நிலைமை சீரானவுடன் தாயும் சேயும் கருமந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Intro:108 ஆம்புலன்சில் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்த
மலை கிராம பெண் .

நள்ளிரவில் பரபரப்பு சம்பவம் Body:
சேலம் அருகே உள்ள கருமந்துறை மலையில் 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது கருமந்துறை மலை கிராமம் .
இங்கு 20க்கும் மேற்பட்ட சிறிய சிறிய மலை கிராமங்கள் உள்ளது.
இங்கு மலைவாழ் மக்கள் திரளாக வசித்து வருகிறார்கள். கருமந் துறையில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செம்பூர் .
மலைக்கிராமம் .

இந்த ஊரைச் சேர்ந்தவர் சீனிவாசன் .

கூலித்தொழிலாளி. இவரது மனைவி பானுமதி .
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பானுமதி மீண்டும் கர்ப்பமாக இருந்தார் -

கடந்த வியாழன் இரவு சுமார் 11 மணி அளவில் பானுமதிக்கு வயிற்று வலி ஏற்பட்டது .இதனால் சீனிவாசன் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே கருமந்துறையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வேன் ஒன்று சென்றது '.
ஆம்புலன்சை ஓட்டுனர் ஸ்டாலின் ஓட்டி செல்ல அவருடன் மருத்துவ உதவியாளர் அறிவுக்கரசு என்பவர் சென்றார்.

இவர்கள் செம்பூருக்குச் சென்று அங்கு பிரசவ வலியால் அவதிப்பட்ட பானுமதியை 108 ஆம்புலன்சில் ஏற்றி கொண்டனர்.
பிறகு ஆம்புலன்ஸ் வேன் புறப்பட்டு கருமந்துறைக்கு வந்து கொண்டிருந்தது .

சுமார் நாலு கிலோ மீட்டர் தொலைவில் ஆம்புலன்ஸ் வந்தபோது மலைப்பாதையில் லாரி ஒன்று பழுது ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மேற்கொண்டு செல்ல முடியாமல் அப்படியே நின்று விட்டது .
அப்போது பானுமதிக்கு வயிற்று வலி ஏற்பட்டு மிகவும் துடித்தார் .

இதை அறிந்த ஓட்டுநர் ஸ்டாலின் மற்றும் மருத்துவ உதவியாளர் அறிவுக்கரசு ஆகியோரும் பானுமதியுடன் வந்த இரண்டு உறவு பெண்களும் பானுமதிக்கு ஆம்புலன்ஸ் வேனிலேயே பிரசவம் பார்த்தனர் .

இதனால் சிறிது நேரத்தில் பானுமதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் ஆம்புலன்ஸ் வேன் மேற்கொண்டு செல்ல முடியாததாலும் அந்த மலைப் பாதையில் செல்போன் டவர் இல்லாததாலும் ஓட்டுநர் ஸ்டாலின் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தும்பல் பகுதியில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து லாரி பழுதாகி நின்று நின்று விட்டதால் 108 ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. இதனால் செம்பூர் மலை கிராமத்திற்கு வருமாறு தெரிவித்தார் .

பிறகு தும்பலிருந்து 108 ஆம்புலன்ஸ் வேன் செம்பூர் கிராமத்திற்கு சென்று அங்கு பழுதாகி நின்றிருந்த லாரி அருகில் சென்றது .

இதனை அறிந்த ஓட்டுநர் ஸ்டாலினும் , மருத்துவ உதவியாளர் அறிவுக்கரசும் 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பானுமதியையும் , குழந்தையையும் அவருடன் வந்த பெண்களையும் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி கருமந்துறைக்கு அழைத்து சென்றனர் .

அப்போது நள்ளிரவு 12 மணி ஆகிவிட்டது. பின்னர் பானுமதி கருமந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இங்கு உடனே டாக்டர்கள் பானுமதிக்கு சிகிச்சை அளித்தனர். இதனால் தாயும் சேயும் நலமாக உள்ளனர் .

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் ,மருத்துவ உதவியாளர் அறிவுக்கரசும் சிரமப்பட்டு பானுமதியை கருமந்துறை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ந்ததால் அவரை டாக்டர்களும் ,
பானுமதியின் உறவினர்களும் பாராட்டினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.