ETV Bharat / state

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் வணிக வளாகப்பணிகள் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

author img

By

Published : Nov 20, 2019, 1:14 PM IST

சேலம்: புதிய பேருந்து நிலையத்தில் 5 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், வணிக வளாகத்தை சேலம் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

municipal commissioner inspection

சேலம் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பாரத ரத்னா எம்ஜிஆர் மத்திய புதிய பேருந்து நிலையத்தில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 5 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய வணிக வளாகக் கட்டடம் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மாநகராட்சி ஆணையர் புதிய வணிக வளாகக் கட்டடங்களை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வங்கிகள், ஏ.டி.எம் மையங்கள், நகைக்கடைகள், குளிரூட்டப்பட்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியக் கடைகள் அமைக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

அனைத்துப் பணிகளும் முடிவும் தருவாயில் உள்ளதால், அடுத்த ஒரு மாத காலத்திற்குப் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். பேருந்து நிலைய வணிக வளாகத்தில் அருகிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது” என்றார்.

சேலம் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பாரத ரத்னா எம்ஜிஆர் மத்திய புதிய பேருந்து நிலையத்தில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 5 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய வணிக வளாகக் கட்டடம் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மாநகராட்சி ஆணையர் புதிய வணிக வளாகக் கட்டடங்களை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வங்கிகள், ஏ.டி.எம் மையங்கள், நகைக்கடைகள், குளிரூட்டப்பட்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியக் கடைகள் அமைக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

அனைத்துப் பணிகளும் முடிவும் தருவாயில் உள்ளதால், அடுத்த ஒரு மாத காலத்திற்குப் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். பேருந்து நிலைய வணிக வளாகத்தில் அருகிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க:

விற்கப்பட்ட குழந்தை ஒரே நாளில் மீட்பு - காவல் துறைக்கு பாராட்டு

Intro:சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 5 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை ஆணையங்கள் சதீஷ் ஆய்வு மேற்கொண்டு அடுத்த ஒரு மாதத்திற்குள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Body:சேலம் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பாரத ரத்னா எம்ஜிஆர் மத்திய புதிய பேருந்து நிலையம் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் 5 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாக கட்டிடம் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் மத்திய பேருந்து நிலையத்தில் புதிய வணிக வளாக கட்டிடங்கள் சீரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையாளர் சதீஷ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வங்கிகள், ஏ.டி.எம் மையங்கள், நகைக்கடைகள், ஆயத்த ஆடை விற்பனை கடைகள், குளிரூட்டப்பட்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய கடைகள் அமைக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனைத்து பணிகளும் முடிவும் தருவாயில் உள்ளதால் அடுத்த ஒரு மாத காலத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் அருகிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பார்க்கிங் வசதி செய்யப்படுவதாக கூறினார்.

பேட்டி: சதீஷ் மாநகராட்சி ஆணையாளர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.