சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள செல்லப்பிள்ளைகுட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பாவானூர் கிராமத்தில் மிகவும் பழமையான அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோயி உள்ளது.
இக்கோயில் தற்போது புனரமைக்கப்பட்டு, புதிய விமான கோபுரங்கள் அமைத்து கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்திற்காக புளியம்பட்டி எல்லையில் உள்ள பாட்டியா கோயிலிலிருந்து கங்கை, யமுனை, காவிரி ஆகிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தம், செண்டை மேளம் முழங்க சுமார் இரண்டு கிலோ மீட்டார் தூரம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோயிலை வந்தடைந்தது.
கோயில் வளாகத்தில் யாகவேள்வி அமைக்கப்பட்டு 108 மூலிகைகளை கொண்டு புனித யாகமும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. விமான கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, செல்வ விநாயகர் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கார்த்திகை தீப விழாவிற்காக விளக்கு விற்பனை கண்காட்சி!