ETV Bharat / state

மனைவியின் புகைப்படங்களை ஆபாசமாக அனுப்பிய கணவன்! - Lady complaint against youth

சேலம்: மனைவியின் புகைப்படங்களை ஆபாசமாக கிராஃபிக்ஸ் செய்து அவற்றை பலருக்கும் அனுப்பிய கணவன் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

obscene pic
author img

By

Published : May 31, 2019, 10:43 AM IST

கடலூர் மாவட்டம் வளையமாதேவியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவர் தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்துவருகிறார். இவர் தனக்கு பெண் தேவை என்று தனியார் திருமண தகவல் மையம் மூலம் 2017ஆம் ஆண்டு பதிவு செய்தார். இதைப் பார்த்த சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகிலுள்ள மருளையம் பாளையத்தைச் சேர்ந்த மேகலா (30) என்ற பெண் பாலமுருகனை தொடர்பு கொண்டார்.

மேகலா தனியார் கார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். பாலமுருகனும், மேகலாவும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி நெருங்கிப் பழகிவந்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் பாலமுருகன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் தனக்கும் மேகலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. பின்னர் மேகலா பலமுறை தன்னிடம் பணம் கேட்டதால் 23 லட்சம் ரூபாய் வரை வீட்டு செலவிற்காக கொடுத்ததாகவும், பிறகு மேகலா அந்த பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் தெரிவித்தார்.

இதுதவிர மேலும் பலரிடம் பழகி வருவதாகவும் இதனால் தான் அவரிடம் சேர்ந்திருக்காமல் தனியே வந்துவிட்டதாகவும் தனது பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு புகார் கொடுத்தார். இதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகேரை நேரில் சந்தித்த மேகலா, பாலமுருகன் தன்னிடம் நெருங்கிப் பழகிவந்தார் என்றும், பிறகு இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கிராஃபிக்ஸ் செய்து ஆபாச படங்களாக மாற்றி நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், எனவே பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

இதனையடுத்து மேகலாவின் புகார் குறித்து சேலம் மாவட்ட கிராமப்புற காவல் துணை கண்காணிப்பாளர் சங்கரநாராயணன் விசாரணை செய்யும்படி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதன் பேரில் சங்கரநாராயணன், கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுஜாதாவும் விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

பாலமுருகன் மீது பெண் வன்கொடுமை, மானபங்கப்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையறிந்து தலைமறைவாகிய பாலமுருகனை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வளையமாதேவியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவர் தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்துவருகிறார். இவர் தனக்கு பெண் தேவை என்று தனியார் திருமண தகவல் மையம் மூலம் 2017ஆம் ஆண்டு பதிவு செய்தார். இதைப் பார்த்த சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகிலுள்ள மருளையம் பாளையத்தைச் சேர்ந்த மேகலா (30) என்ற பெண் பாலமுருகனை தொடர்பு கொண்டார்.

மேகலா தனியார் கார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். பாலமுருகனும், மேகலாவும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி நெருங்கிப் பழகிவந்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் பாலமுருகன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் தனக்கும் மேகலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. பின்னர் மேகலா பலமுறை தன்னிடம் பணம் கேட்டதால் 23 லட்சம் ரூபாய் வரை வீட்டு செலவிற்காக கொடுத்ததாகவும், பிறகு மேகலா அந்த பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் தெரிவித்தார்.

இதுதவிர மேலும் பலரிடம் பழகி வருவதாகவும் இதனால் தான் அவரிடம் சேர்ந்திருக்காமல் தனியே வந்துவிட்டதாகவும் தனது பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு புகார் கொடுத்தார். இதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகேரை நேரில் சந்தித்த மேகலா, பாலமுருகன் தன்னிடம் நெருங்கிப் பழகிவந்தார் என்றும், பிறகு இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கிராஃபிக்ஸ் செய்து ஆபாச படங்களாக மாற்றி நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், எனவே பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

இதனையடுத்து மேகலாவின் புகார் குறித்து சேலம் மாவட்ட கிராமப்புற காவல் துணை கண்காணிப்பாளர் சங்கரநாராயணன் விசாரணை செய்யும்படி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதன் பேரில் சங்கரநாராயணன், கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுஜாதாவும் விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

பாலமுருகன் மீது பெண் வன்கொடுமை, மானபங்கப்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையறிந்து தலைமறைவாகிய பாலமுருகனை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

காதலித்து திருமணம் செய்து மனைவியின்  புகைப்படங்களை கிராபிக்ஸ் செய்து ஆபாசமாக அனுப்பிய கணவர் 

சேலம் இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் வாலிபருக்கு வலைவீச்சு

சேலம் : 30-05-2019:


திருமண தகவல் மையம் மூலம் பெண் தேடி திருமணம் செய்துகொண்ட வாலிபர் பின்னர் அந்த இளம் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை பலருக்கு அனுப்பியது சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 பின்னர் இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் வாலிபரை சேலம் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

 கடலூர் மாவட்டம் வளையமாதேவியை  சேர்ந்தவர் பாலமுருகன். 35 வயதான பாலமுருகன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். 
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனக்கு பெண் தேவை என தனியார் திருமண தகவல் மையம் மூலம் பதிவு செய்தார் .

இதை பார்த்த சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகிலுள்ள மருளையம் பாளையத்தைச் சேர்ந்த மேகலா (வயது 30)என்ற பெண் பாலமுருகனை தொடர்பு கொண்டார்.  மேகலா தனியார் கார்  நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். பாலமுருகனும், மேகலாவும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி நெருங்கி பழகி வந்தனர்.

 பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

 பிறகு இருவரும் பிரிந்து விட்டனர் .இந்த நிலையில் பாலமுருகன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் தனக்கும் மேகலாவும் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. பின்னர் மேகலா பல முறை  தன்னிடம் பணம்  கேட்டதால் 
 23 லட்சம் ரூபாய்வரை வீட்டு செலவிற்காக கொடுத்ததாகவும் ,பிறகு மேகலா அந்த பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் தெரிவித்தார்.

 இதுதவிர மேலும் பலரிடம் பழகி வருவதாகவும் இதனால் தான் அவரிடம் சேர்ந்திருக்காமல் தனியே வந்து விட்டதாகவும் ,தனது பணத்தை திரும்ப வாங்கி தருமாறு ம்புகார் கொடுத்தார். 

 இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் .

இந்த நிலையில் மேகலா கடந்த வாரம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகேரிடம் நேரில் வந்து பாலமுருகன் தன்னிடம் நெருங்கி பழகி  வந்தார் என்றும், பிறகு இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கிராபிக்ஸ் செய்து ஆபாச படங்களாக மாற்றிநண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்  என்றும் இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார் .

இதனை விசாரித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உடனே சேலம் மாவட்ட ரூரல் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கரநாராயணனை  விசாரிக்க  உத்தரவிட்டார் இதன் பேரில் சங்கரநாராயணன் மற்றும்  கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுஜாதாவும் விசாரணை செய்தனர்.

 பிறகு மேகலா கொடுத்த . புகாரின் பேரில் நேற்று வழக்கு பதிவு செய்தனர் .
இதில் பெண் வன்கொடுமை மற்றும் மானபங்கப்படுத்துதல்  உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 இதனை அறிந்த பாலமுருகன் தலைமறைவாகி விட்டார்.   இவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் கொண்டலாம்பட்டி காவல் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுஜாதா மற்றும் காவலர்கள் இடம்பெற்று பாலமுருகனை வலைவீசி தேடி வருகிறார்கள் .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.