ETV Bharat / state

சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு - குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்!

author img

By

Published : Nov 19, 2019, 7:45 PM IST

சேலம்: ஆறு வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இந்திய வாலிபர் சங்கத்தினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் இணைந்து ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Salem

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஊ.மாரமங்கலம் கிராமத்தில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஆறு வயது பள்ளி சிறுமி ஒருவர், மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்.

அந்தச் சிறுமி தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை.

இதைக் கண்டித்து, இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், மெத்தனப் போக்குடன் செயல்படும் காவல்துறையினரை கண்டித்தும் கோரிக்கை வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்நது காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சித்தபோது கோபமடைந்த அவர்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தையின் முடிவில் காவல் துறையினர் கைது நடவடிக்கையை கைவிட்டனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் காவல் துறையினரிடம் வலியுறுத்தி கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஊ.மாரமங்கலம் கிராமத்தில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஆறு வயது பள்ளி சிறுமி ஒருவர், மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்.

அந்தச் சிறுமி தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை.

இதைக் கண்டித்து, இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், மெத்தனப் போக்குடன் செயல்படும் காவல்துறையினரை கண்டித்தும் கோரிக்கை வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்நது காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சித்தபோது கோபமடைந்த அவர்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தையின் முடிவில் காவல் துறையினர் கைது நடவடிக்கையை கைவிட்டனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் காவல் துறையினரிடம் வலியுறுத்தி கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை!

Intro:6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய வாலிபர் சங்கமும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து சேலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


Body:சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த
ஊ. மாரமங்கலம் கிராமத்தில் 6 வயது பள்ளி சிறுமியை மூன்று நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் .

இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி தற்போது சேலம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் இதுவரை காவல்துறையினரால் கைது செய்யப்படாமல் இருக்கிறார்கள் .

இதனையடுத்து இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

ஆர்ப்பாட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் மெத்தனப் போக்குடன் செயல்படுவதை கண்டித்தும் தமிழக அரசு பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பை வழங்கிடும் வகையில் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன .

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சித்தனர் . இதனால் அதிருப்தி அடைந்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த காவல்துறையினர் அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர் . ஆனால் போராட்டக்காரர்கள் கைது செய்வதற்கு மறுப்பு தெரிவித்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கைது செய்வதை விட்டுவிட்டு நீதி கேட்டு போராட்டம் நடத்தும் எங்களை ஏன் கைது செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்த இந்த சாலை மறியல் போராட்டத்தின் இறுதியில் காவல்துறையினர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை கைவிட்டனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் காவல் துறையினரிடம் வலியுறுத்தினர்.

(பேட்டி : ராஜாத்தி, சேலம் மாவட்ட துணை தலைவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்)


Conclusion:நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் போராட்டமாக நடந்ததால் சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.