ETV Bharat / state

சேலத்தில் குணமடைந்து வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்!

author img

By

Published : Apr 24, 2020, 10:37 AM IST

சேலம்: கரோனா நோய்த் தொற்று பாதித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

four corona patients discharged in salem Govt.hospital
four corona patients discharged in salem Govt.hospital

சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதித்த 24 பேர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.

முன்னதாக பத்து பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, டெல்லி சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பிய தாரமங்கலத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், கரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த எடப்பாடியைச் சேர்ந்த ஒரு பெண், களரம்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண் ஆகிய நால்வரும் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

இதையடுத்து சேலம் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து திரும்பியவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்து வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்

இந்நிகழ்ச்சியில் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர், கண்காணிப்பாளர், சுகாதாரத் துறை துணை இயக்குநர், அரசு மருத்துவமனை பொது மருத்துவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்களுக்கு காய்கறி, மருத்துவ உபகரணங்களை வழங்கி கைத்தட்டி வழியனுப்பிவைத்தனர்.

மேலும், குணமடைந்து வீடு திரும்பியுள்ள நான்கு பேரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீதமுள்ள 10 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:கரோனா: குணமடைந்தவர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு!

சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதித்த 24 பேர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.

முன்னதாக பத்து பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, டெல்லி சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பிய தாரமங்கலத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், கரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த எடப்பாடியைச் சேர்ந்த ஒரு பெண், களரம்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண் ஆகிய நால்வரும் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

இதையடுத்து சேலம் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து திரும்பியவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்து வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்

இந்நிகழ்ச்சியில் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர், கண்காணிப்பாளர், சுகாதாரத் துறை துணை இயக்குநர், அரசு மருத்துவமனை பொது மருத்துவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்களுக்கு காய்கறி, மருத்துவ உபகரணங்களை வழங்கி கைத்தட்டி வழியனுப்பிவைத்தனர்.

மேலும், குணமடைந்து வீடு திரும்பியுள்ள நான்கு பேரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீதமுள்ள 10 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:கரோனா: குணமடைந்தவர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.