ETV Bharat / state

ஓமலூர் அருகே போலி மருத்துவர் கைது: கிளினிக்கிற்கு சீல்!

சேலம்: ஓமலூர் அருகே காலாவதியான மருந்து மாத்திரைகளை கொண்டு, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு, அவர் நடத்திவந்த கிளினிக்கிற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 23, 2019, 1:28 PM IST

fake doctor

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள சந்தைப்பேட்டையில் முருகேசன் என்பவர் பல வருடங்களாக அருண் கிளினிக் ஒன்றை நடத்திவந்தார். இங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், இது குறித்து ஓமலுார் எம்எல்ஏவிடம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர்.

இதைத் தொடர்ந்து, அவர் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சரிடம் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். இதனையடுத்து, நேற்று மாநில மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்ககம் மாநில ஆய்வு கண்காணிப்புக் குழு ஒன்று சேலம் வந்தது. அங்கு முருகேசனிடம் உடல்நிலை சரியில்லை என்று நோயாளிபோல் ஒருவர் சென்று கூறியபோது, அவருக்கு முருகேசன் ஊசி போட முயன்றார்.

அப்போது அங்கு மறைந்திருந்த குழுவினரும், காவல் துணை கண்காணிப்பாளர் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர். தொடர்ந்து குடும்ப நலம், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் சத்தியா, ஓமலூர் மருத்துவ அலுவலர் ஜெயேந்திரன் ஆகியோர் அடங்கிய இரண்டு குழுக்களும் சேர்ந்து முருகேசனின் கிளினிக்கை ஆய்வு செய்தனர்.

போலி மருத்துவர் கைது

இதில் போலி மருத்துவ சான்றிதழை வைத்து மருத்துவம் பார்த்து வந்ததும், உயிருக்கு ஆபத்தைவிளைவிக்கக் கூடிய காலாவதியான மாத்திரைகள் வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

இது குறித்து இணை இயக்குநர் சத்தியா கூறுகையில், இவர் நான்குமுறை கைதாகி, ஒருமுறை தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டவர் என்றும், தனியாருக்கு நிகராக, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்படுவதால், அங்கு சென்று பொதுமக்கள் சிகிச்சைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள சந்தைப்பேட்டையில் முருகேசன் என்பவர் பல வருடங்களாக அருண் கிளினிக் ஒன்றை நடத்திவந்தார். இங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், இது குறித்து ஓமலுார் எம்எல்ஏவிடம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர்.

இதைத் தொடர்ந்து, அவர் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சரிடம் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். இதனையடுத்து, நேற்று மாநில மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்ககம் மாநில ஆய்வு கண்காணிப்புக் குழு ஒன்று சேலம் வந்தது. அங்கு முருகேசனிடம் உடல்நிலை சரியில்லை என்று நோயாளிபோல் ஒருவர் சென்று கூறியபோது, அவருக்கு முருகேசன் ஊசி போட முயன்றார்.

அப்போது அங்கு மறைந்திருந்த குழுவினரும், காவல் துணை கண்காணிப்பாளர் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர். தொடர்ந்து குடும்ப நலம், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் சத்தியா, ஓமலூர் மருத்துவ அலுவலர் ஜெயேந்திரன் ஆகியோர் அடங்கிய இரண்டு குழுக்களும் சேர்ந்து முருகேசனின் கிளினிக்கை ஆய்வு செய்தனர்.

போலி மருத்துவர் கைது

இதில் போலி மருத்துவ சான்றிதழை வைத்து மருத்துவம் பார்த்து வந்ததும், உயிருக்கு ஆபத்தைவிளைவிக்கக் கூடிய காலாவதியான மாத்திரைகள் வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

இது குறித்து இணை இயக்குநர் சத்தியா கூறுகையில், இவர் நான்குமுறை கைதாகி, ஒருமுறை தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டவர் என்றும், தனியாருக்கு நிகராக, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்படுவதால், அங்கு சென்று பொதுமக்கள் சிகிச்சைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Intro:ஓமலூர் அருகே காலாவதியான மனித உடலுக்கு அதிகம் பக்கவிளைவுகள் உண்டாக்கக்கூடிய மருந்து மாத்திரைகளை கொண்டு , நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை கைது செய்து, அவர் நடத்திய கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Body:

சேலம் மாவட்டம்,காடையாம்பட்டி தாலுக்கா சந்தைப்பேட்டையில் முறையாக மருத்துவம் பயிலாமல் கடந்த பல வருடமாக மருத்துவம் பார்த்து வந்து முருகேசன் என்ற போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

காடையாம்பட்டி அருகேயுள்ள சந்தைப்பேட்டையில் முருகேசன் என்பவர் கடந்த பல வருடங்களாக முறையாக மருத்துவம் படிக்காமல் அருண் கிளினிக் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பலபேர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் , ஓமலூர் சட்டமன்ற உறுப்பினரிடன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து அவர் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம்  நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் தெரிவித்தார். இதனையடுத்து இன்று மாநில மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயங்கக மாநில ஆய்வு கண்காணிப்பு குழு டிஎஸ்பி தாமஸ்பிரபாகர் மற்றும் கமலக்கண்ணன், நடராஜன்,தலைமை காவலர் ராஜீவ் காந்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் சேலம் வந்தனர்.

பின்பு முருகேசனின் கிளினிக்கிற்கு ஒருவரை நோயாளிபோல் அனுப்பி வைத்து அவர் அங்கு சென்று உடல்நலம் சரியில்லை என முருகேசனிடம் கூறியபொழுது அவர் ஊசி போட முயன்றுள்ளார்.

அப்பொழுது மறைந்திருந்த டிஎஸ்பி மற்றும் குழுவினர் மருத்துவரை கையும் களவுமாக பிடித்தனர்.இதனைதொடர்ந்து குடும்ப நலம் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் சத்தியா,ஓமலூர் மருத்துவ அலுவலர் ஜெயேந்திரன் ஆகியோர் அடங்கிய குழு ஆகிய இரண்டு குழுக்களும் சேர்ந்து அருண் கிளினிக்கிள் ஆய்வு செய்தனர்.

இதில் போலி மருத்துவ சான்றிதழ் வைத்துக்கொண்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்ததும், நோயாளிகளுக்கு கொடுக்க வைத்திருந்த குவியல் குவியலாக மாத்திரை மற்றும் ஊசிகளையும் கண்டறிந்து அவற்றை கைப்பற்றினர்.

மேலும் உயிருக்கு ஆபத்தான, மனித உடலுக்கு அதிகம் பக்கவிளைவுகளை உண்டாக்க கூடிய மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகள் வைத்துள்ளதையும் கண்டறிந்தனர். பின்னர் கிளினிக்கிற்கு சீல் வைத்தனர்.

மேலும் இதுகுறித்து இணை இயக்குனர் சத்தியா கூறுகையில், ' இந்த போலி மருத்துவர் ஏற்கனவே பலமுறை கைதாகி உள்ளதார். அப்போது அவர் ஒரு முறை தண்டணை பெற்று சிறையில் அடைக்கப்பட்டா.

மேலும் முருகேசன் நோயாளிகளுக்கு செலுத்தும் ஊசிகள் மிகவும் அபாயகரமான மருந்து என்பதால், சிறுநீரகம் பழுதடைய வாய்ப்பு அதிகம் உள்ளது.

அரசு மருத்துவமனையில் இலவசமாக, தனியார் மருத்துவமனைக்கு இணையாக சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதுமாதிரியான போலி மருத்துவரை அணுகாமல் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.Conclusion:காலாவதியான மருந்துகளை வைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் செய்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.