ETV Bharat / state

மலையடிவாரத்திலிருந்து மக்களை வெளியேற்றிய சம்பவம்: முன்னாள் நீதிபதி விசாரணை - Evacuation of people from the foothills of Salem

சேலம்: பனமரத்துப்பட்டி அருகே மலை அடிவாரத்தில் வசித்துவந்த மக்களை வெளியேற்றிய சம்பவம் குறித்து முன்னாள் நீதிபதி ராஜாராம் இன்று நேரில் விசாரணை நடத்தினார்.

முன்னாள் நீதிபதி ராஜாராம் விசாரணை
முன்னாள் நீதிபதி ராஜாராம் விசாரணை
author img

By

Published : Jan 28, 2020, 7:20 PM IST

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த சூரியூர் கிராமம் கடந்த பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய பகுதியாகவே உள்ளது. காப்புக்காடுகளுக்கு நடுவே உள்ள சூரியூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாகக் குடியிருந்துவருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வனத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து நேற்று காவல் துறையினர் இப்பகுதியில் குவிக்கப்பட்டு வனத் துறை சார்பில் அங்கு வசித்துவந்த மக்களின் குடிசைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சூரியூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சேலம் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து நீதிமன்றம் இச்சம்பவம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஒருவரை ஆணையராக நியமித்து விசாரணை நடத்த வேண்டும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது ஏன் என்றும் இரு தரப்பினரிடையே கருத்து கேட்டு 10 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஒரு நபர் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, முன்னாள் நீதிபதி ராஜாராம் இன்று நேரில் சென்று சூரியூர் கிராமத்தில் விசாரணை நடத்தினார். அப்போது, வீடுகளை அகற்றப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு சூரியூர் மக்களின் கோரிக்கைகள், பெயர் விவரங்களை கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் நீதிபதி ராஜாராம் விசாரணை

இதையும் படிங்க: கோவையில் 250 வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க உயர் நீதிமன்றம் தடை

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த சூரியூர் கிராமம் கடந்த பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய பகுதியாகவே உள்ளது. காப்புக்காடுகளுக்கு நடுவே உள்ள சூரியூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாகக் குடியிருந்துவருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வனத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து நேற்று காவல் துறையினர் இப்பகுதியில் குவிக்கப்பட்டு வனத் துறை சார்பில் அங்கு வசித்துவந்த மக்களின் குடிசைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சூரியூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சேலம் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து நீதிமன்றம் இச்சம்பவம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஒருவரை ஆணையராக நியமித்து விசாரணை நடத்த வேண்டும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது ஏன் என்றும் இரு தரப்பினரிடையே கருத்து கேட்டு 10 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஒரு நபர் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, முன்னாள் நீதிபதி ராஜாராம் இன்று நேரில் சென்று சூரியூர் கிராமத்தில் விசாரணை நடத்தினார். அப்போது, வீடுகளை அகற்றப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு சூரியூர் மக்களின் கோரிக்கைகள், பெயர் விவரங்களை கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் நீதிபதி ராஜாராம் விசாரணை

இதையும் படிங்க: கோவையில் 250 வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க உயர் நீதிமன்றம் தடை

Intro:சேலம் அருகே மலை அடிவாரத்தில் வசித்து வந்த மக்களை வெளியேற்றி சம்பவத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவரை ஆணையராக நியமித்து விசாரணை நடத்த சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டது..........

இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞரும், முன்னாள் நீதிபதியுமான ராஜாராம் இன்று நேரில் விசாரணை நடத்தினார்......





Body:
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த சூரியூர் கிராமம் கடந்த பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய பகுதியாகவே உள்ளது. காப்பு காடுகளுக்கு நடுவே உள்ள சூரியூர் கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக குடியிருந்த ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் இப்பகுதியில் குவிக்கப்பட்டு வனத்துறை சார்பில் அங்கு வசித்து வந்த மக்களின் குடிசைகள் அதிரடியாக அகற்ற பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று சூரியூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்ற நபர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்1 நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதில்
சேலம் அருகே மலை அடிவாரத்தில் வசித்து வந்த மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி வீடுகளை இடித்த சம்பவம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஒருவரை ஆணையராக நியமித்து விசாரணை நடத்த சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது ஏன் என்றும் இரு தரப்பினரிடையே கருத்து கேட்டு 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஒரு நபர் ஆணையத்திற்கு சேலம் முதலாவது குற்றவியல் நிதித்துறை நடுவர் உத்தரவிட்டது. இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞரும், முன்னாள் நீதிபதியுமான ராஜாராம் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் வீடுகளை அகற்றப்பட்ட இடங்களை பார்வையிட்டு சூரியூர் மக்களின் கோரிக்கைகள் மற்றும் பெயர் விவரங்களை கேட்டுப் பெற்றுக்கொண்டார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.