ETV Bharat / state

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் - அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

author img

By

Published : Nov 24, 2019, 2:15 AM IST

சேலம்: போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் பேட்டி


சேலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் போக்குவரத்து துறை பிரிவினரின் மாநில அளவிலான செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'அரசுப் போக்குவரத்து துறையில் உள்ள நூற்றுக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறிப்பாக கண்காணிப்பாளர் பணியிடங்களில் சரி பாதி அளவு காலிப்பணியிடங்கள் உள்ளன' என்றார்.

மேலும், 'டிசம்பர் 8ஆம் தேதி சேலத்தில் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடத்த முடிவு செய்துள்ளதாகவும்' கூறினார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் பேட்டி

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பணியாளர் சங்கப் பிரதிநிதிகள், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபரிடம் லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடம் மாற்றம்!


சேலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் போக்குவரத்து துறை பிரிவினரின் மாநில அளவிலான செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'அரசுப் போக்குவரத்து துறையில் உள்ள நூற்றுக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறிப்பாக கண்காணிப்பாளர் பணியிடங்களில் சரி பாதி அளவு காலிப்பணியிடங்கள் உள்ளன' என்றார்.

மேலும், 'டிசம்பர் 8ஆம் தேதி சேலத்தில் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடத்த முடிவு செய்துள்ளதாகவும்' கூறினார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் பேட்டி

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பணியாளர் சங்கப் பிரதிநிதிகள், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபரிடம் லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடம் மாற்றம்!

Intro:போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.


Body:சேலத்தில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் போக்குவரத்து துறை பிரிவினரின் மாநில அளவிலான செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார் . பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," அரசுப் போக்குவரத்து துறையில் உள்ள நூற்றுக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் .

குறிப்பாக கண்காணிப்பாளர் பணியிடங்களில் சரி பாதி அளவு காலிப்பணியிடங்கள் உள்ளன. அதேபோல மற்ற பிரிவுகளிலும் மூன்றில் ஒரு பங்கு காலிப்பணியிடங்கள் உள்ளன.

இதனால் போக்குவரத்து துறை மூலம் மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது எனவே அரசு உரிய கவனம் செலுத்தி காலிப்பணியிடங்களை நிரப்பிட முன் வர வேண்டும்.

இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் மாதம் எட்டாம் தேதி சேலத்தில் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் முடிவு செய்து உள்ளது" என்று தெரிவித்தார்.


Conclusion:இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு
போக்குவரத்து துறை பணியாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.