தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் (80). இவர் சங்ககிரிக்கு அருகில் உள்ள தேவூர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர்.
வயது முதிர்வு காரணமாக சில நாள்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், காளியண்ணனுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் இன்று மாலை காளியண்ணன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்குகள் இன்று இரவு 11 மணிக்கு தேவூர் அம்மாபாளையத்தில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் விசாரணை - கைதி மரணம்!