ETV Bharat / state

முதலமைச்சரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம் - disabled person protest in salem

சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

முதலமைச்சர் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
முதலமைச்சர் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
author img

By

Published : Dec 14, 2021, 11:10 PM IST

சேலம்: மாற்றுத்திறனாளிகள் (உடல் ஊனத்தின் அளவு- 40% மேல் ) உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை மாதம் 3 ஆயிரம் ரூபாயும் 75% ஊனமுற்றவர்களுக்கு மாதம் 5ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகச் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் ஆறு மாதங்களாகியும் உயர்த்தி வாங்கப்படவில்லை. எனவே, இதனைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

இந்த போராட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்துக் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இந்த, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து பின் விடுவித்தனர்.

இதையும் படிங்க: தெய்வ நம்பிக்கை இல்லாத முதலமைச்சர்; எப்படி குறைகளை சரி செய்யப் போகிறார் - வானதி சீனிவாசன்

சேலம்: மாற்றுத்திறனாளிகள் (உடல் ஊனத்தின் அளவு- 40% மேல் ) உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை மாதம் 3 ஆயிரம் ரூபாயும் 75% ஊனமுற்றவர்களுக்கு மாதம் 5ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகச் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் ஆறு மாதங்களாகியும் உயர்த்தி வாங்கப்படவில்லை. எனவே, இதனைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

இந்த போராட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்துக் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இந்த, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து பின் விடுவித்தனர்.

இதையும் படிங்க: தெய்வ நம்பிக்கை இல்லாத முதலமைச்சர்; எப்படி குறைகளை சரி செய்யப் போகிறார் - வானதி சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.