ETV Bharat / state

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை - ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் !

author img

By

Published : Jul 3, 2019, 8:46 AM IST

சேலம்: வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதை கண்டித்து, உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செல்வியின் உறவினர்கள்

சேலம் அருகே உள்ள முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சுரேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சுரேஷ் மற்றும் அவரது தாயார் ஆகியோர் வரதச்சணை கேட்டு செல்வியை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை செல்வி மர்மமான முறையில் வீட்டில் இறந்துள்ளார். இவரது சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூறாய்வு மேற்கொள்ள சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த செல்வியின் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். பிறகு செல்வியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறிய உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.

வியின் உறவினர்கள்

இதனையறிந்த உதவி ஆணையர் ஈஸ்வரன், ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று செல்வியின் உறவினர்களை சமாதானம் செய்தனர். வரதட்சனை கொடுமையால் தான் செல்வி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். எனவே,செல்வியின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என செல்வியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

சேலம் அருகே உள்ள முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சுரேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சுரேஷ் மற்றும் அவரது தாயார் ஆகியோர் வரதச்சணை கேட்டு செல்வியை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை செல்வி மர்மமான முறையில் வீட்டில் இறந்துள்ளார். இவரது சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூறாய்வு மேற்கொள்ள சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த செல்வியின் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். பிறகு செல்வியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறிய உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.

வியின் உறவினர்கள்

இதனையறிந்த உதவி ஆணையர் ஈஸ்வரன், ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று செல்வியின் உறவினர்களை சமாதானம் செய்தனர். வரதட்சனை கொடுமையால் தான் செல்வி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். எனவே,செல்வியின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என செல்வியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Intro:வரதட்சணை கேட்டு தனது மகளை அடித்துக் கொன்றதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.


Body:சேலம் டவுன் முன் வாடி கேட் பகுதியை சேர்ந்தவர் செல்வி.

22 வயதான செல்வியை கடந்த 2 வருடத்திற்கு முன்பு கொண்டலாம்பட்டி யைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

தற்போது இவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

செல்வியிடம் அடிக்கடி வரதச்சனை பணம் வாங்கி வரச்சொல்லி மாமியார் மற்றும் கணவர் சுரேஷ் கொடுமைப்படுத்தி வந்தனராம்.

இந்த நிலையில் திங்கள் அதிகாலை செல்வி மர்மமாக வீட்டில் இறந்து கிடந்தார்.

இவரது சடலத்தை கொண்டலாம்பட்டி போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் செவ்வாய் மாலை செல்வியின் உறவினர்கள் திறனாக சேலம் அரசு மணிக்கு வந்தனர்.

பின்னர் இவர்கள் செல்வியின் உடலை பார்த்து கதறி அழுதனர் .

பிறகு அனைவரும் அரசு தலைமை மருத்துவமனை முன்புறம் உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதித்தது.

இதனை அறிந்த டவுன் உதவி கமிஷனர் ஈஸ்வரன் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து செல்வியின் உறவினர்களை சமாதானம் செய்தனர்.

செல்வியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வரதட்சனை கொடுமையால் தன் செல்வி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இதற்கு காரணமான அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என செல்வியின் உறவினர்கள் தெரிவித்தனர்.



Conclusion:பின்னர் அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து மீண்டும் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் போக்குவரத்து சீரானது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.